பக்கம் எண் :

16காத்தவராயன் கதைப்பாடல்

கோதிலா மாமறையோர் கொம்பனையாள் மாலையரை
நிறையதாய் வளர்த்தருளும் நின்மகன் காத்தவனே
 
சிறையே எடுத்தவனும் தேசம்விட்டுப் போனானே
தேசம் விட்டுப்போனாலே தேடவே வேண்டாம்போ
 
நம்முடைய ராச்சியத்தில் நலமாக வீற்றிருந்தால்
செம்மையல்ல நம்முடைய செங்கோலுக்கே அதுவும்
 
இத்தேசம் தனிலே இருப்பானே யாமாகில்
சுற்றி வளைத்துச் சூரன் தனைப்பிடித்து
 
வெற்றியுடன் கொண்டுவந்தல் வேணு மரியாதையுண்டு
இஷ்டமுடன் தந்திடுவோம். இடராக நீயிருந்தால்
 
சட்டமுடன் உன்னையுநான் சரியாய்க் கழுவதனில்
திட்டமுடன் ஏற்றிவைப்பேன் சேப்பிளையே நீர்கேளும்
சேப்பிளை விருத்தம்
நாட்டிலே மூவர் நாங்கள்
   நலமுடன் ஆலம் பாக்கில்
போட்டியாய் எதிர்த்த பேரை
   பொருதுடன் விருது வாங்கி
 
மேட்டியே எனவ றிந்தீர்
   மெச்சியே காவல் தந்தீர்
தெட்டற் களவுக் கெல்லாம்
   தெரிந்துயான் தருகு வேனே.
நடை
ஆரியப்பூ ராசனையும் அடிபணிந்து சேப்பிளையான்
காரியமாகவே தான் காத்த பரிமணத்தை
 
தேடிப் பிடிப்பதற்கு சேனைபடை கூட்டி
நாடி ஒருவாரம் நாளையிலே நானடியேன்
 
திக்குத் திசைதோறும் தேடியே யானடியேன்
பக்கமுள்ள நாடு பட்டிணங்களைப் பார்த்து
 
ஸ்ரீராமர் தேவியர்க்காய் தென்னிலங்கை தூது சென்ற
மாறாபி றாமியர்க்கு வாகனமாய் நின்றருளும்
 
அஞ்சனா தேவிமைந்தன் அடிபிடித்துப் போனாற்போல்
இச்சையுடன் பெண்ணவளை எடுத்தோடிப் போனவனை