|
கோதிலா மாமறையோர் கொம்பனையாள் மாலையரை |
நிறையதாய் வளர்த்தருளும் நின்மகன் காத்தவனே |
|
சிறையே எடுத்தவனும் தேசம்விட்டுப் போனானே |
தேசம் விட்டுப்போனாலே தேடவே வேண்டாம்போ |
|
நம்முடைய ராச்சியத்தில் நலமாக வீற்றிருந்தால் |
செம்மையல்ல நம்முடைய செங்கோலுக்கே அதுவும் |
|
இத்தேசம் தனிலே இருப்பானே யாமாகில் |
சுற்றி வளைத்துச் சூரன் தனைப்பிடித்து |
|
வெற்றியுடன் கொண்டுவந்தல் வேணு மரியாதையுண்டு |
இஷ்டமுடன் தந்திடுவோம். இடராக நீயிருந்தால் |
|
சட்டமுடன் உன்னையுநான் சரியாய்க் கழுவதனில் |
திட்டமுடன் ஏற்றிவைப்பேன் சேப்பிளையே நீர்கேளும் |
சேப்பிளை விருத்தம் |
நாட்டிலே மூவர் நாங்கள் |
நலமுடன் ஆலம் பாக்கில் |
போட்டியாய் எதிர்த்த பேரை |
பொருதுடன் விருது வாங்கி |
|
மேட்டியே எனவ றிந்தீர் |
மெச்சியே காவல் தந்தீர் |
தெட்டற் களவுக் கெல்லாம் |
தெரிந்துயான் தருகு வேனே. |
நடை |
ஆரியப்பூ ராசனையும் அடிபணிந்து சேப்பிளையான் |
காரியமாகவே தான் காத்த பரிமணத்தை |
|
தேடிப் பிடிப்பதற்கு சேனைபடை கூட்டி |
நாடி ஒருவாரம் நாளையிலே நானடியேன் |
|
திக்குத் திசைதோறும் தேடியே யானடியேன் |
பக்கமுள்ள நாடு பட்டிணங்களைப் பார்த்து |
|
ஸ்ரீராமர் தேவியர்க்காய் தென்னிலங்கை தூது சென்ற |
மாறாபி றாமியர்க்கு வாகனமாய் நின்றருளும் |
|
அஞ்சனா தேவிமைந்தன் அடிபிடித்துப் போனாற்போல் |
இச்சையுடன் பெண்ணவளை எடுத்தோடிப் போனவனை |