|
| முன்னவன் கையில் முறிகடனோ பட்டிருந்தோம் |
| மின்னாளே நீயழுக வேண்டாமென” உரைத்து |
| |
| சேனைபடை கூட்டிச் சேப்பிளையான் அப்போது |
| ஆனைப்படையைப் பார்த்துச் சொல்லுவான் ஓர்வசனம் |
| |
| சத்திபதி சித்தமுடன் உத்தரவு பெற்றருளி |
| தம்பியர்கள் மூவருடன் |
| |
| உதிர்பெற்ற கோட்டையது மேல்வாசல் வழிசென்று |
| தனசேகரத் துடனே |
| |
| சத்தர்முதல் மொழிபெற்ற உறையூர் தென்னூரோங்கு |
| வளர்ப்புத்தூர் தனிலிருந்து |
| |
| போதமுடன் வெங்கலக்கொம் புகள்பிடித்துப் புகழ்பெற்ற |
| முரசு அறையவும் |
| |
| வித்தரண சூரர்கள் வித்தரணிகள் புகழ் |
| வெற்றித் தமுக்கடித்து |
| |
| வீரானகம்ப ரசம்பேட்டை முதலாக மேல்முகம் |
| சாலை வழியாய் |
| |
| மத்தமுடி ராசாக்கள் வழக்கைப் பிரித்திடும் |
| மதுகரைக்கும் கிழக்கு |
| |
| வளர்தோகை மலைமுதல் பொன்விளைந்தாம் பட்டிவல்லம் |
| தஞ்சாவூர் முதல் |
| |
| சுத்திவர வீரர்கள் காவேரிக் கரையிலும் |
| சர்க்கார் பாளையத்திலும் |
| |
| சிறந்த தேவதானப்பட்டி திருச்சிறார் தேரோடும் |
| வீதி தனிலும் |
| |
| பக்தர்கள் பட்டிணம் தன்னிலும் பாலக் |
| கரை முழுதும் |
| |
| பரிவுடன் தாராநல்லூர் வரகநேரி பக்தர்கள் |
| முத்த மதிலும் |
| |
| நதியேவட கரைசுற்றியே தேடியும் நந்திதிரு |
| வேங்கி வரையிலும் |
| |
| நலமான அரியலூர் வயிரசெட்டி பாளையம் |
| நலமுதவும் சங்கேந்தியும் |
| |
| ஏத்தியே தன்னரசு பாதிகாவல் சீமையெங்கும் |
| தேடியும் என் மகனைக் காணேனே8 |