|
| எதிர்கொண்ட காத்தன்பதி கொண்ட ஊரெல்லாம் |
| எங்கெங்கும் தேடுவனே. |
| |
| வசனம் : ஆகோ வாருங்கள் தூதர்களே நான் சொல்லிய இடமெல்லாம் தேடவணே்டும் தூதர்களே. இப்போது எங்கே தேடுவது என்றால் திரிசிரபுரத்திற்கும் மேற்கு, மதுகரைக்கும் கிழக்கு, பாண்டியனார் எல்லைக்கும் வடக்கு, காவேரிக் கரைக்கும் தெற்கு இதில் உள்ள கிராமங்கள் எல்லாம் தேடிப் பார்ப்போம் வாருங்கள் தூதர்களே. |
| நடை |
| (நாட்டுப்பாடல்) |
| உறையூர் தென்னூர் ஓங்கிவளர் புத்தூர்வரை |
| பெருகும் உய்யக்கொண்டான் வயலூர் குழுமணியாம் |
| |
| சோமரசம் பேட்டை துடியிடைபால் நங்கபுரம் |
| காமரசம் பெருகும் கம்பரசம் பேட்டைமுதல் |
| |
| அல்லூர் பமூர் அனைலை கொடியாளம் |
| புல்லூர் வடசேரி பொய்யாமணி மருதூர் |
| |
| இலுப்பூர் தவத்தூர் ஏகிரி மங்கலமாம் |
| வளம்பெருகு பெருகமணி வய்யநல்லூர் மணித்திட்டை |
| |
| முருங்க ளத்தூர் முத்தரச நல்பேட்டை |
| சித்தவரை வென்ற சிறுகமணி கள்ளபுலி |
| |
| கொச்சி திருச்சி குண்டுலவு மணப்பாறை |
| நேசர் பரவுகிற ரெத்னகிரி தொகைமலை |
| |
| கடம்பவனம் ராசேந்திரம் கருப்பூர் மேல்குடியும் |
| கட்டளை மணவாசி காகிஷ்ட்ண ராயபுரம் |
| |
| சித்தர் தொழுதருளும் திருப்பிலாத் துறையழகர் |
| |
| அரும்புமலர்ப் பூச்சொரியும் ஆதிபனங் காவேரி |
| கரும்பாயி சன்னதியும் காமநாய்க்கன் பாளையமாம்9 |
| |
| பூசுரர்கள் கொண்டாடும் பொன்னி நதிக்கரையும் |
| ராசகம்பீர வளர்நகர் காவல் சேப்பிளையான் |
| |
| சுற்றினோம் தென்கரையில் திருச்சினாப் |
| பள்ளிமுதல் சிறந்த மேற்கில் |