|
வாருமையா ராசாவே ஒருவசனம் உரைக்கின்றேன் |
பாருலகில் முன்நடந்த பழமை உரைக்கிறேன் |
|
துஷ்டருக்கு எத்தனைதான் சொன்னாலும் சொன்னமொழி |
அக்ஷணமே பொறுத்தல் ஆவதுண்டோ மன்னவனே |
|
வஞ்ச அரவினுக்கு வாய்த்தமிர்தம் தானளித்தால் |
நஞ்சை உதவுமல்லாமல் நல்லமிர்தம் தந்திடுமோ |
|
தேள்தனைக் கையால் சேர அணைத்தெடுத்தால் |
ஆள்தனைக் கொட்டாமல் அமிர்தம் கொடுத்திடுமோ18 |
|
நெருப்பைக் கனல்பொறியாய் நேரிட்டு ஒதுங்காமல் |
விருப்பமுடன் முடிந்தால் வேகாமல் விட்டிடுமோ |
|
பாட்டைவைத்19 தானெளிதாய் பார்த்துச் சுழற்றாவிட்டால் |
வெட்டாமல் விட்டிடுமோ வேந்தரே கேளமைய்யா |
|
துஷ்டருக்கு உரைத்தபுத்தி சிறக்குமோ லோகந்தன்னில் |
இஷ்டமாய் சிறையெடுத்தேன் இது ஒருபெரிதோ முன்னால் |
|
திட்டமாய் பெரியோர்பெண்ணைத் தேடியே யெடுத்தபேரை |
பொட்டெனச் சொல்லுவேனிப்போ புகழுரை செய்குவீரே. |
|
வாருமையா ராசாவே ஒருவசனம் உரைக்கின்றேன் |
பாருமையா யானடியேன் பணிந்து உரைக்கின்றேன் |
|
பார்வதியாள் தானிருக்க பரம சிவனாரும் |
ஓர்சடையில் கன்னிதனை ஒளித்து வாழலையோ |
|
நலமுடைய லஷ்மியாள் நன்றாய் அருகிருக்க |
உலக மளந்ததொரு உத்தமனாம் மாயவனார் |
|
தேச மதிலாய் சிறக்கவே கொண்டருளி |
சத்திய பாமாவைத் தழுவி யணையலையோ |
|
அன்ன மதிலேறும் ஆனதொரு பிர்மாவும் |
வர்ணக் கலைமகளை வாக்கிலே வைத்தருளி |
|
தானே படைத்துச் சமைந்ததொரு ஊர்வசியை |
மானே யெனத்தொடர்ந்து மருவிப் புணரலையோ |
|
கந்தனுடன் தெய்வானை கலந்து அருகிருக்க |
வந்து குறவருட வள்ளிதனைச் சேரலையோ |