|
| ராசனும் கொலுவி ருந்து |
| நலமுடன் காத்தான் தன்னை |
| நேசமாய் உனக்கு இப்போ |
| நீணிலத் தரசு காவல் |
| வாசமாய் தந்தோம் நீயும் |
| வகையுடன் நடக்கை தப்பி |
| பாசமாய் மறையோர் பெண்ணை |
| பரும்சிறை எடுக்க லாமா? |
| |
| |
| வசனம் : ஆகோ கேளும் பிள்ளாய் காத்தவராயனே நீர் முன்னாலே செய்த குற்றமெல்லாம் பொறுத்து உன்னை மேலாக வைத்திருக்கும் பிர்ம குலத்திலே பிறந்திருக்கும் ஆரியமாலையை சிறையெடுக்கலாமா சொல்லும் பிள்ளாய் காத்தவராயனே. |
| |
| மெய்யனே உலகம் தன்னில் |
| வேந்தர்க்கு வேந்தா கேளாய் |
| வையகம் தன்னில் பிரமன் |
| வகுத்திடும் படியாய் தோன்றும் |
| |
| வெய்யவே வரும் பொருட்டை |
| ஒருவனால் விலக்கப் போமோ |
| அய்யனே கேளு மென்று |
| அடிபணிந் துரைசெய் தாரே. |
| |
| நடை |
| நாட்டுப்பாடல் |
| ஆரியப்பூ ராசாவேஎன் ஆண்டவனே கும்பிடுறேன் |
| காரியமாய் கேட்டருளும்என் கர்த்தாவே சொல்லுகிறேன் |
| |
| தேசம் அறிந்திடவே செய்தகுற்றம் நீர்பொறுத்து |
| வாசமுடன் எந்தனுக்கும் மனது பிரியதமாய் |
| |
| பாதிகாவல் எந்தனுக்கு பகுத்தீரே ராசாவே |
| சாதி மறையோர்கள் சரியென்று சொல்லிடவே |
| |
| பெத்த தகப்பனினும் பிரபலமாய் எந்தனுக்கு |
| புத்தியது சொன்னீர்காண் புண்ணியரே உம்மாலே |
| |
| எண்ணி வருங்கருமம் எப்படியோ நீரறிந்து |
| சொன்னீர்காண் புத்தியது தோஷமில்லை என்பேரில் |