பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்37

ராசனும் கொலுவி ருந்து
   நலமுடன் காத்தான் தன்னை
நேசமாய் உனக்கு இப்போ
   நீணிலத் தரசு காவல்
வாசமாய் தந்தோம் நீயும்
   வகையுடன் நடக்கை தப்பி
பாசமாய் மறையோர் பெண்ணை
   பரும்சிறை எடுக்க லாமா?
 
 
     வசனம் : ஆகோ கேளும் பிள்ளாய் காத்தவராயனே நீர் முன்னாலே செய்த குற்றமெல்லாம் பொறுத்து உன்னை மேலாக வைத்திருக்கும் பிர்ம குலத்திலே பிறந்திருக்கும் ஆரியமாலையை சிறையெடுக்கலாமா சொல்லும் பிள்ளாய் காத்தவராயனே.
 
மெய்யனே உலகம் தன்னில்
   வேந்தர்க்கு வேந்தா கேளாய்
வையகம் தன்னில் பிரமன்
   வகுத்திடும் படியாய் தோன்றும்
 
வெய்யவே வரும் பொருட்டை
   ஒருவனால் விலக்கப் போமோ
அய்யனே கேளு மென்று
   அடிபணிந் துரைசெய் தாரே.
 
நடை
நாட்டுப்பாடல்
ஆரியப்பூ ராசாவேஎன் ஆண்டவனே கும்பிடுறேன்
காரியமாய் கேட்டருளும்என் கர்த்தாவே சொல்லுகிறேன்
 
தேசம் அறிந்திடவே செய்தகுற்றம் நீர்பொறுத்து
வாசமுடன் எந்தனுக்கும் மனது பிரியதமாய்
 
பாதிகாவல் எந்தனுக்கு பகுத்தீரே ராசாவே
சாதி மறையோர்கள் சரியென்று சொல்லிடவே
 
பெத்த தகப்பனினும் பிரபலமாய் எந்தனுக்கு
புத்தியது சொன்னீர்காண் புண்ணியரே உம்மாலே
 
எண்ணி வருங்கருமம் எப்படியோ நீரறிந்து
சொன்னீர்காண் புத்தியது தோஷமில்லை என்பேரில்