பக்கம் எண் :

36காத்தவராயன் கதைப்பாடல்

தினமுடைய மறையோர்கள் திருச்சமுகம்
   தனிலுரைத்த தீர னானவனே
 
மனமுடைய மாலையரைச் சிறையெடுத்த
   மதகரியை யானும் தேடி
கனமுடனே பிடித்துவந்தேன் பரிமணத்தை
   தேவரீர் கைக்கொள்ளு வீரே.
 
அறஞ்செலுத்தும் வேந்தனேநீ அருள்கொடுக்க
   விடைபெற்று அடியேன் சென்று
திறஞ்செலுத்தித் தேசமதில் யான்தேடிப்
   பிடித்து வந்தேன் தேவரீரும்
 
அறஞ்செலுத்தும் காத்தவனே அடக்கம்
   செய்திடுவீர் அவனை நீரும்
புறஞ்செலுத்தி விட்டாலும் கழுவேற்றி
   வைத்தாலும் உன்பெருமை தானே.
 
 
     வசனம் : ஆகோ கேளுங்களய்யா சாமி உங்களுடைய ஆக்கினைக்குப் பயந்து என் பிள்ளையை உன் உலகமுழுவதும் அலைந்து தேடிப்பிடித்துக்கொண்டு உம்மிடத்தில் விட்டுவிட்டேன். தயவுசெய்து விட்டபோதிலும் உம்முடைய இஷ்டம் கழுவேற்றி வைத்தாலும் உன்பெருமை தானய்யா சுவாமி.
வெண்பா
ஐங்கரனைப் போற்றிசெய்து அடிதொழுது முக்காலும்
இங்கிதமாய் இயம்பிடவே ஏசல்-பொங்கமுடன்
 
காத்தவனார் ஏசல்தனைக் கரிமுகனே யான்படிக்க
காத்தருள்வாய் காப்புத் தானே.
 
புலியது சிங்கம் போல
   புஜபலத் தழக னான
கலியுகம் விளங்க வந்த
   காத்தவ ராயன் தானும்
வலியுடன் கட்டிச் செல்ல
   மன்னவன் கொலுவின் முன்னே
நலிவுடன் காத்தே நிற்க
   ராசனும் கொலுவி ருந்தான்.