|
| தினமுடைய மறையோர்கள் திருச்சமுகம் |
| தனிலுரைத்த தீர னானவனே |
| |
| மனமுடைய மாலையரைச் சிறையெடுத்த |
| மதகரியை யானும் தேடி |
| கனமுடனே பிடித்துவந்தேன் பரிமணத்தை |
| தேவரீர் கைக்கொள்ளு வீரே. |
| |
| அறஞ்செலுத்தும் வேந்தனேநீ அருள்கொடுக்க |
| விடைபெற்று அடியேன் சென்று |
| திறஞ்செலுத்தித் தேசமதில் யான்தேடிப் |
| பிடித்து வந்தேன் தேவரீரும் |
| |
| அறஞ்செலுத்தும் காத்தவனே அடக்கம் |
| செய்திடுவீர் அவனை நீரும் |
| புறஞ்செலுத்தி விட்டாலும் கழுவேற்றி |
| வைத்தாலும் உன்பெருமை தானே. |
| |
| |
| வசனம் : ஆகோ கேளுங்களய்யா சாமி உங்களுடைய ஆக்கினைக்குப் பயந்து என் பிள்ளையை உன் உலகமுழுவதும் அலைந்து தேடிப்பிடித்துக்கொண்டு உம்மிடத்தில் விட்டுவிட்டேன். தயவுசெய்து விட்டபோதிலும் உம்முடைய இஷ்டம் கழுவேற்றி வைத்தாலும் உன்பெருமை தானய்யா சுவாமி. |
| வெண்பா |
| ஐங்கரனைப் போற்றிசெய்து அடிதொழுது முக்காலும் |
| இங்கிதமாய் இயம்பிடவே ஏசல்-பொங்கமுடன் |
| |
| காத்தவனார் ஏசல்தனைக் கரிமுகனே யான்படிக்க |
| காத்தருள்வாய் காப்புத் தானே. |
| |
| புலியது சிங்கம் போல |
| புஜபலத் தழக னான |
| கலியுகம் விளங்க வந்த |
| காத்தவ ராயன் தானும் |
| வலியுடன் கட்டிச் செல்ல |
| மன்னவன் கொலுவின் முன்னே |
| நலிவுடன் காத்தே நிற்க |
| ராசனும் கொலுவி ருந்தான். |