பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்35

பச்சமலை பதிகொண்ட பார்வதியாள் பெற்றிடும்
   பரிமள ராயன் வந்தான்
பாங்கான வயிரசெட்டி பாளையம் பதிகொண்ட
   பச்சைக் கழுவன் வந்தான்
 
உச்சித மாகடவ பக்தர்வினை தீர்த்திட
   உவந்து அவனும் வந்தான்
ஓங்காளி கையினில் கிண்ணரி தமுரும்பெற்ற
   ஓங்கிதிரு லோலன் வந்தான்
 
அச்ச மில்லாமலே ஆரிய மாலையை
   அணைந்த போசன் வந்தான்
அழகான பெண்கொடி ஓந்தாயி தன்னையும்
   அரும்சிறை யெடுத்து வந்தான்
 
வச்சிரகிரி மேவுவேன் வரைத்தாசியர்கள் மோகிக்க
   வாது கூறிடவே வந்தான்
மகராசனாகவே அரசு காவலுங் கொண்ட
   மாணிக்க ஓளியன் வந்தான்
 
இச்சையுடன் யானுமே ஆசையாய் தேடிட
   எங்கள்துரை வீரன் வந்தான்
என்னாளும் என்னருகில் எப்போது மிருக்கவே
   ஈசனருள் பெற்று வந்தான்
 
தட்சரூபங் கொண்டு பூவாயி மனைதனில்
   தானுமது உண்டு வந்தான்
சந்தோஷ மாகவே என்கையில் கட்டுண்டு
   சமுகத்தி லெதிரே வந்தான்
 
நிச்சய மாக என்னாளும் பாச்சூரில்
   நின்று கழுவேற வந்தான்
லீலா விநோதனே நிருபனவன் சமுகம்
   நேரிடக் காத்தான் வந்தான்
 
தனமுடைய அருமலர்கள் தொழுதேத்தும்
   ஆரியப்பா தனசேகர சிங்காரனே