|
பச்சமலை பதிகொண்ட பார்வதியாள் பெற்றிடும் |
பரிமள ராயன் வந்தான் |
பாங்கான வயிரசெட்டி பாளையம் பதிகொண்ட |
பச்சைக் கழுவன் வந்தான் |
|
உச்சித மாகடவ பக்தர்வினை தீர்த்திட |
உவந்து அவனும் வந்தான் |
ஓங்காளி கையினில் கிண்ணரி தமுரும்பெற்ற |
ஓங்கிதிரு லோலன் வந்தான் |
|
அச்ச மில்லாமலே ஆரிய மாலையை |
அணைந்த போசன் வந்தான் |
அழகான பெண்கொடி ஓந்தாயி தன்னையும் |
அரும்சிறை யெடுத்து வந்தான் |
|
வச்சிரகிரி மேவுவேன் வரைத்தாசியர்கள் மோகிக்க |
வாது கூறிடவே வந்தான் |
மகராசனாகவே அரசு காவலுங் கொண்ட |
மாணிக்க ஓளியன் வந்தான் |
|
இச்சையுடன் யானுமே ஆசையாய் தேடிட |
எங்கள்துரை வீரன் வந்தான் |
என்னாளும் என்னருகில் எப்போது மிருக்கவே |
ஈசனருள் பெற்று வந்தான் |
|
தட்சரூபங் கொண்டு பூவாயி மனைதனில் |
தானுமது உண்டு வந்தான் |
சந்தோஷ மாகவே என்கையில் கட்டுண்டு |
சமுகத்தி லெதிரே வந்தான் |
|
நிச்சய மாக என்னாளும் பாச்சூரில் |
நின்று கழுவேற வந்தான் |
லீலா விநோதனே நிருபனவன் சமுகம் |
நேரிடக் காத்தான் வந்தான் |
|
தனமுடைய அருமலர்கள் தொழுதேத்தும் |
ஆரியப்பா தனசேகர சிங்காரனே |