|
வெள்ளிமலை நாதரருள் காத்தவனார் |
உலகம் விளங்கத் தோன்றி |
|
துள்ளிவிளை யாடிய சங்கப் |
பிள்ளையிடம் வந்தருளித் தெளிவனாகி |
|
தெள்ளமுதாய் வளர்ந்தருளும் மாலையரைக் |
களவுதனில் திருடிப் போன |
|
கள்ளனுமே யானெனவே காத்தவனைச் |
சேப்பிளயான் கட்டி னானே. |
|
|
மைந்தனெனும் காத்தவனை வந்துதான் சேப்பிளையான் அந்தமுள ஓர்கையிலே அன்புடனே மாலைகொண்டு மாலையரைத் தொட்டணைந்த வலதுகையில் மாலைகொண்டு காவலனும் கட்டிக் கடுகி நடந்தானே. |
நடந்தனன்காண் காத்தவனும் முன்நடக்க |
நாடிவந்த சேவகர்கள் பின்நடக்க |
|
தொடர்ந்தனன்காண் சேப்பிளையான் மாலைகொண்டு |
துரந்திரனைக் கைப்பிடித்தே ராசன்முன்னே |
|
அடர்ந்தனன்காண் ஆரியப்பன் கொலுமுன்பாக |
அடிபணிந்து அரசனுட சமுகந்தன்னில் |
|
படர்ந்தனன்காண் காத்தவனைச் சபையோர்முன்னே |
பாருமையா என்றுமவன் பகருவானே. |
|
|
வசனம் : ஆகோ கேளும் பிள்ளாய் அரசுகாவல் சேப்பிளையானே இந்தக் காத்தவராயன் மகாசுத்த வீரனாச்சுதே உன் கையில் எப்படி அகப்பட்டான். |
பதினாறு அடி விருத்தம் |
கச்சியுமை பங்காளர் பார்வதியாள் பெற்றிடும் |
காத்தவ ராயன் வந்தான் |
|
கலியுகம் விளங்கிட அவதார மதுசெய்த |
கலியுக வரதன் வந்தான் |