பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்33

நடை
மயங்கிக் கிடந்திடவே மங்கையவள் பூவாயி
தியங்கிக் கிடந்தவுடன் தெருவிலே ஓடிவந்து
 
சொன்னாள் சமயமென சொன்னவுடன் கோடிபடை
மன்னவர்கள் ஓடிவந்து வளைத்துப் பரிமணத்தை
 
வெறியாய்க் கிடந்துநின்ற வீரியனைத் தான்பிடித்து
கருவிக் கயிற்றாலே கட்டினார் கையிறுக
 
கையிறுகக் கட்டவே காத்த பரிமளமும்
அய்யமார் கட்டை அறுத்தார் பொடிப்பொடியாய்
 
கட்டுங் கயிற்றாலே கனமாக வந்த படை
வெட்டு வானென்று மிகவே பயம் பிடித்து
 
ஓடியே போனாரே உல்லாச ரூபழகன்
நாடியே கண்டு நலமாய் மனதிலெண்ணி
 
இன்னுமிவர் சேதியை யாமறிய வேண்டுமென்று
பின்னும் மயங்கிப் பலங்குறைந்து தான்கிடக்கும்
 
அன்னவரைப் போல அவர்கிடந்தார் காத்தவனார்
 
இங்கிவனைக் கட்டுதற்கு இன்ன கயிறாகாது
சங்கிலிதான் வேண்டுமினு தான்கொண்டு வாருமென்று
 
மதயானை கட்டுகிற வாகன சங்கிலியால்
இதவாகத் தான்பிடித்து இறுக்கினார் கையிறுக
 
சங்கிலயால் கட்டிடவே தேட்டாளன் காத்தவனார்
அங்கதனைக் கையாலே அறுத்தார் பொடிப் பொடியாய்
 
பொடிப்பொடியாய் அறுத்தெறிந்து பூவிதனைப் பார்த்து
கடியமலர்க் குழலீர் கட்டிடநீ பண்ணிவைத்தாய்
 
என்னைப் பிடிக்கவரும் எதிரில்லா வீரருடன்
 
வந்தவர்கள் தன்பலத்தை வகையாயிறிந் தேனடிபூவாயி
கந்தமலர்க் குழலீர் கட்டவத்த வீரருடன்
 
என்னைப் பிடிப்பதுவும் எளிதாய் இருக்குமோதான்
முன்னால் சிவனாரும் மொழிந்ததொரு சாபமதால்
 
கர்த்தன் கிருபையினால் கட்டுப்பட வேணுமினி
கள்ளனுமே யான்தான் கட்டுமென்றார் காத்தவனார்