பக்கம் எண் :

32காத்தவராயன் கதைப்பாடல்

இப்படிச் சொல்லியங்கு இருக்கின்றான் சேப்பிளையான்
செப்பமுடன் காத்தவனார் தேவியிடம் ஈதுரைப்பார்
 
வாருமடி பெண்ணே ஒருவசனம் உரைக்கின்றேன்
பார்தனில் உன்னைப் பரிந்து சிறையெடுக்க
 
வேதியர்கள் அங்கு வெகுண்டு போய் ராசனிடம்
சேதி உரைத்திடவே சிறந்து எனைப்பிடிக்க
 
என்தகப்பன் சேப்பிளையான் சீமையெங்கும் தேடுகிறான்
அன்புடனே நானும் அவன்கையில் அகப்பட்டு
 
கண்டு ராசனையும் கழுவேறித் திரும்பி
உனையழைக்க வருமளவும் கன்னியே பாரதனில்
 
உண்டு இருமென்று உரைக்கின்றார் காத்தவனார்
 
காத்தான் சொல்விருத்தம்
அன்புடைய மங்கையரே சொல்லக் கேளாய்
   அவருடைய கையிலே யான்சிக் கிடினும்
 
இன்பமுடன் ராசனையும் கண்டு யானும்
   பருங்கழுவில் ஏறிய பின்னுனை அழைக்க
 
அன்புடனே வந்திடுவேன் அதுவரைக்கும்நீ
   அசையாமல் இருமெனவே வெளியில் வந்து
 
பண்புடனே பாச்சூர் சென்று காத்தான்
   பாங்குமதி குடிக்க பயனைச் சொல்வேனே
 
காத்தான் மதுகுடி விருத்தம்
ராசருட சேவகர்கள் கவிந்ததையும்
   பூவாயி நல்ல தென்று
 
நேசமுடன் சரக்குவகை நிறையச் சேர்த்து
   மதுவடிய நிறையக் கட்டி
 
ஆசையுடன் வைத்திருக்க காத்தவனார்
   மதுவருந்தி அவள்தன் வீட்டில்
 
வாசமுள்ள பூவாயி மதுவுண்டு
   மலரணையில் மயங்கினாரே