|
| இப்படிச் சொல்லியங்கு இருக்கின்றான் சேப்பிளையான் |
| செப்பமுடன் காத்தவனார் தேவியிடம் ஈதுரைப்பார் |
| |
| வாருமடி பெண்ணே ஒருவசனம் உரைக்கின்றேன் |
| பார்தனில் உன்னைப் பரிந்து சிறையெடுக்க |
| |
| வேதியர்கள் அங்கு வெகுண்டு போய் ராசனிடம் |
| சேதி உரைத்திடவே சிறந்து எனைப்பிடிக்க |
| |
| என்தகப்பன் சேப்பிளையான் சீமையெங்கும் தேடுகிறான் |
| அன்புடனே நானும் அவன்கையில் அகப்பட்டு |
| |
| கண்டு ராசனையும் கழுவேறித் திரும்பி |
| உனையழைக்க வருமளவும் கன்னியே பாரதனில் |
| |
| உண்டு இருமென்று உரைக்கின்றார் காத்தவனார் |
| |
| காத்தான் சொல்விருத்தம் |
| அன்புடைய மங்கையரே சொல்லக் கேளாய் |
| அவருடைய கையிலே யான்சிக் கிடினும் |
| |
| இன்பமுடன் ராசனையும் கண்டு யானும் |
| பருங்கழுவில் ஏறிய பின்னுனை அழைக்க |
| |
| அன்புடனே வந்திடுவேன் அதுவரைக்கும்நீ |
| அசையாமல் இருமெனவே வெளியில் வந்து |
| |
| பண்புடனே பாச்சூர் சென்று காத்தான் |
| பாங்குமதி குடிக்க பயனைச் சொல்வேனே |
| |
| காத்தான் மதுகுடி விருத்தம் |
| ராசருட சேவகர்கள் கவிந்ததையும் |
| பூவாயி நல்ல தென்று |
| |
| நேசமுடன் சரக்குவகை நிறையச் சேர்த்து |
| மதுவடிய நிறையக் கட்டி |
| |
| ஆசையுடன் வைத்திருக்க காத்தவனார் |
| மதுவருந்தி அவள்தன் வீட்டில் |
| |
| வாசமுள்ள பூவாயி மதுவுண்டு |
| மலரணையில் மயங்கினாரே |