பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்31

கூவாதே சேப்பிளையான் பாரருகே
   குடியிருக்கும் கொடியோன் தன்னை
 
ஏவாத மக்கள்தனை மூவாத
   மனிதரென்று எண்ணி நீயும்
 
ஆவாத பிள்ளைதனை ஆரடித்தால்
   உனக்காவ தென்ன இப்போ
 
பூவாயி மனைபுகுந்தால் காத்தவனைப்
   பிடித்திடுவீர் புகழுள் ளோனே
 
அய்யரருட் பாதமதை அடிவணங்கி
   சேப்பிளையான் அவ்விடம் விட்டு
 
மெய்யனே பாச்சூர் பூவாயி
   தனைக்கண்டு விளம்பக் கேட்டு
 
செய்யெனவே சம்மதியாய் காத்தவனார்
   உண்டருள சரக்குச் சேர்த்து
 
வையகமதில் காத்தவனார் மதுகுடித்த
   வாறதனை வசனிப் பேனே.
 
பூவாயியிடம் சேப்பிளை சொல்விருத்தம்
 
அம்மையே பூவாயி உன்னிடம் வந்ததை
   அருளவே கேள மம்மா
 
ஆரியப் பேந்திரன் சேவகர்கள் நாங்களும்
   அனுப்பிட வந்தோ மம்மா
 
செம்மையாய் சீமையைக் காவலும் காக்கின்ற
   சேப்பிளை யான்பெற் றெடுத்த
 
தீரனெனும் காத்தவன் ஆரிய மாலையைத்
   திருடியே கொண்டு செல்ல
 
அம்மொழி கொண்டதொரு ராசனும் கோபமாய்
   அவனையே பிடித்து வரவும்
 
அவனப்பனை அனுப்பிடத் தேடியே காணாமல்
   அவனுள் மனையில் நித்தம்
 
கண்மணி காத்தவன் வந்திடும் வேளையில்
   கட்டியே எங்க ளிடமாய்
 
கட்டியே கொடுத்திட்டால் கனகமது நாங்களும்
   கனமுடன் தருகு வோமே