|
| கூவாதே சேப்பிளையான் பாரருகே |
| குடியிருக்கும் கொடியோன் தன்னை |
| |
| ஏவாத மக்கள்தனை மூவாத |
| மனிதரென்று எண்ணி நீயும் |
| |
| ஆவாத பிள்ளைதனை ஆரடித்தால் |
| உனக்காவ தென்ன இப்போ |
| |
| பூவாயி மனைபுகுந்தால் காத்தவனைப் |
| பிடித்திடுவீர் புகழுள் ளோனே |
| |
| அய்யரருட் பாதமதை அடிவணங்கி |
| சேப்பிளையான் அவ்விடம் விட்டு |
| |
| மெய்யனே பாச்சூர் பூவாயி |
| தனைக்கண்டு விளம்பக் கேட்டு |
| |
| செய்யெனவே சம்மதியாய் காத்தவனார் |
| உண்டருள சரக்குச் சேர்த்து |
| |
| வையகமதில் காத்தவனார் மதுகுடித்த |
| வாறதனை வசனிப் பேனே. |
| |
| பூவாயியிடம் சேப்பிளை சொல்விருத்தம் |
| |
| அம்மையே பூவாயி உன்னிடம் வந்ததை |
| அருளவே கேள மம்மா |
| |
| ஆரியப் பேந்திரன் சேவகர்கள் நாங்களும் |
| அனுப்பிட வந்தோ மம்மா |
| |
| செம்மையாய் சீமையைக் காவலும் காக்கின்ற |
| சேப்பிளை யான்பெற் றெடுத்த |
| |
| தீரனெனும் காத்தவன் ஆரிய மாலையைத் |
| திருடியே கொண்டு செல்ல |
| |
| அம்மொழி கொண்டதொரு ராசனும் கோபமாய் |
| அவனையே பிடித்து வரவும் |
| |
| அவனப்பனை அனுப்பிடத் தேடியே காணாமல் |
| அவனுள் மனையில் நித்தம் |
| |
| கண்மணி காத்தவன் வந்திடும் வேளையில் |
| கட்டியே எங்க ளிடமாய் |
| |
| கட்டியே கொடுத்திட்டால் கனகமது நாங்களும் |
| கனமுடன் தருகு வோமே |