பக்கம் எண் :

30காத்தவராயன் கதைப்பாடல்

அப்பா மகனே என்னருதை திருமேனியனே
செப்பார் முலைமாது தெகட்டாத தெள்ளமுதே
 
பாப்பாரப் பெண்ணை நீ பரிந்து சிறையெடுத்து
தாப்பரியமாகத் தானொளித்து வைத்த தினால்
 
அரசன் உனைப்பிடித்து ஆக்கினை செய்யவென்று
விரசுடனே சொன்னதனால் வெம்புதே என்மனது
 
கல்யாணம் செய்து கண்குளிரப் பாராமல்
நிலையாய்க் கழுவிருக்க நெருங்கினதோ காலமிது
 
அழகை எழுதினவன் அதிர்ஷ்டம் எழுதாமல்
இளமைப் பிராயத்தில் ஏறிக் கழுவிருக்க
 
முந்தி அரனாரும் முனிந்ததொரு சாபமிதோ
இந்தப் பெருங்கழுவில் ஏறவோ நீயிருந்தாய்
 
கைப்பிடியாய் நான்வளர்த்த காத்த பரிமளத்தை
எப்படி நான் கழுவில் ஏற்றிவைப்பேன் என்றழுதான்
 
தத்தளித்து நின்றழுக சாமி பரிமளமும்
மருச்சலங் காத்தான் மாய வடிவாக
 
குறிச்சழுத சேப்பிளைமுன் கோலமறை வேதியன்போல்
சீரான காத்தவனார் சிறிது மனமிரங்கி
 
தன்னை வளர்த்ததொரு தகப்பனென்று காத்தவனார்16
முன்னூல் குடுமியுடன் முன்னாக வந்துநின்று
 
சாத்திரங்கள் சொல்லுகிறார் தங்கப் பரிமளமும்
தோத்திரங்கள் செய்தருளும் துய்யதொரு மானிடரே
 
காத்தானுட தன்னடியைக் கண்டீர்கள் எல்லாரும்
இதமுடனே காத்தவனார் இருக்குமிடம் சொல்லுகிறேன்
 
காய்ச்சி மதுவெடுக்கும் கனத்த பூவாயிமனை17
பாச்சூரில் சென்று பாவை பூவாயிமனை
 
சொன்னீர் களாமாகில் சுகந்த பரிமளத்தை
முன்னாகவே காட்டி முத்துப் பரிமளத்தை
 
மதுவைப் புகட்டியவள் வர்ண பரிமளத்தை
எதிராகவே காட்டி இனிய பரிமளத்தை
 
திருடுவாள்காண் பூவாயி தான்போங்க ளென்றுசொன்னார்