|
| ஓடியே அலைந்தேன் நானுன்னைத் தேடி |
| உலைமெழுகாய் உருகினேன் வாடிவாடி |
| |
| பாடியே உன்பெருமை கொண்டுயானும் |
| பகலிரவாய் வணங்கினேன் பரனே கேளாய் |
| |
| கூடியே மாலையுடன் பாருக் குள்ளே |
| குடியிருந்தால் உனைக்காண என்னால் ஆமோ |
| |
| நாடியே உன்பாதம் கண்ட பேர்க்கு |
| நடந்தோடி நல்வசனம் நவிலு வாயே. |
| |
| பாரினில் உந்தனடியைக் கண்டு பட்சமானேன் |
| பயங்கரங்கள் விண்டேனப் பாயா னுமினி |
| |
| பாரில்யானும் ஆரியப்பன் ஆக்கினைக்குப் பயந்து |
| அலைந்தேனப்பா ஒரு வாரம் உன்னைத் தேடி |
| |
| வீரியமாய் மாலையுடன் பாருக்குள் நீயும் |
| வீற்றிருந்தால் உனைக்காண என்னால் ஆமோ. |
| |
| ஆரியனே இவ்வேளை என்னைக் காக்க |
| அடியவர்க்கு முன்தோன்றி அருளு வாயே. |
| |
| கச்சியுமை பங்காள் ஈன்றருளும் |
| மைந்தனே காத்தவனே நீவருகவே |
| |
| பச்சைமலை பதிகொண்ட பார்வதியாள் |
| பெற்றிடும் பரிமளம் நீவருகவே |
| |
| பாரேழு லோகமும் தானடிமை |
| கொண்டதொரு பாரிமளம் நீவருகவே |
| |
| உலகமதிலே இப்பக் கலிகால |
| தேசிகா உத்தமனே நீவருகவே |
| |
| இச்சையுடன் என்மனதில் எந்நாளும் |
| குடியான இலங்குகலி யுகவாணனே |
| |
| இப்போது என்னுடைய இடர்தனைத் |
| தீர்க்கவே எதிரேநீ வருகுவாயே |
| நடை |
| நாட்டுப்பாடல் |
| பாலன்தணை நினைந்து பார்காக்கும் சேப்பிளையான் |
| சீலன்தனை நினைந்து திகைத்துப் புலம்புகிறான் |