பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்29

ஓடியே அலைந்தேன் நானுன்னைத் தேடி
   உலைமெழுகாய் உருகினேன் வாடிவாடி
 
பாடியே உன்பெருமை கொண்டுயானும்
   பகலிரவாய் வணங்கினேன் பரனே கேளாய்
 
கூடியே மாலையுடன் பாருக் குள்ளே
   குடியிருந்தால் உனைக்காண என்னால் ஆமோ
 
நாடியே உன்பாதம் கண்ட பேர்க்கு
   நடந்தோடி நல்வசனம் நவிலு வாயே.
 
பாரினில் உந்தனடியைக் கண்டு பட்சமானேன்
   பயங்கரங்கள் விண்டேனப் பாயா னுமினி
 
பாரில்யானும் ஆரியப்பன் ஆக்கினைக்குப் பயந்து
   அலைந்தேனப்பா ஒரு வாரம் உன்னைத் தேடி
 
வீரியமாய் மாலையுடன் பாருக்குள் நீயும்
   வீற்றிருந்தால் உனைக்காண என்னால் ஆமோ.
 
ஆரியனே இவ்வேளை என்னைக் காக்க
   அடியவர்க்கு முன்தோன்றி அருளு வாயே.
 
கச்சியுமை பங்காள் ஈன்றருளும்
   மைந்தனே காத்தவனே நீவருகவே
 
பச்சைமலை பதிகொண்ட பார்வதியாள்
   பெற்றிடும் பரிமளம் நீவருகவே
 
பாரேழு லோகமும் தானடிமை
   கொண்டதொரு பாரிமளம் நீவருகவே
 
உலகமதிலே இப்பக் கலிகால
   தேசிகா உத்தமனே நீவருகவே
 
இச்சையுடன் என்மனதில் எந்நாளும்
   குடியான இலங்குகலி யுகவாணனே
 
இப்போது என்னுடைய இடர்தனைத்
   தீர்க்கவே எதிரேநீ வருகுவாயே
நடை
நாட்டுப்பாடல்
பாலன்தணை நினைந்து பார்காக்கும் சேப்பிளையான்
சீலன்தனை நினைந்து திகைத்துப் புலம்புகிறான்