|
ஓடியே அலைந்தேன் நானுன்னைத் தேடி |
உலைமெழுகாய் உருகினேன் வாடிவாடி |
|
பாடியே உன்பெருமை கொண்டுயானும் |
பகலிரவாய் வணங்கினேன் பரனே கேளாய் |
|
கூடியே மாலையுடன் பாருக் குள்ளே |
குடியிருந்தால் உனைக்காண என்னால் ஆமோ |
|
நாடியே உன்பாதம் கண்ட பேர்க்கு |
நடந்தோடி நல்வசனம் நவிலு வாயே. |
|
பாரினில் உந்தனடியைக் கண்டு பட்சமானேன் |
பயங்கரங்கள் விண்டேனப் பாயா னுமினி |
|
பாரில்யானும் ஆரியப்பன் ஆக்கினைக்குப் பயந்து |
அலைந்தேனப்பா ஒரு வாரம் உன்னைத் தேடி |
|
வீரியமாய் மாலையுடன் பாருக்குள் நீயும் |
வீற்றிருந்தால் உனைக்காண என்னால் ஆமோ. |
|
ஆரியனே இவ்வேளை என்னைக் காக்க |
அடியவர்க்கு முன்தோன்றி அருளு வாயே. |
|
கச்சியுமை பங்காள் ஈன்றருளும் |
மைந்தனே காத்தவனே நீவருகவே |
|
பச்சைமலை பதிகொண்ட பார்வதியாள் |
பெற்றிடும் பரிமளம் நீவருகவே |
|
பாரேழு லோகமும் தானடிமை |
கொண்டதொரு பாரிமளம் நீவருகவே |
|
உலகமதிலே இப்பக் கலிகால |
தேசிகா உத்தமனே நீவருகவே |
|
இச்சையுடன் என்மனதில் எந்நாளும் |
குடியான இலங்குகலி யுகவாணனே |
|
இப்போது என்னுடைய இடர்தனைத் |
தீர்க்கவே எதிரேநீ வருகுவாயே |
நடை |
நாட்டுப்பாடல் |
பாலன்தணை நினைந்து பார்காக்கும் சேப்பிளையான் |
சீலன்தனை நினைந்து திகைத்துப் புலம்புகிறான் |