பக்கம் எண் :

28காத்தவராயன் கதைப்பாடல்

விடியக்கதிர் எழுவதுபோல் அடியார்க்கு
   முன்தோன்றி விளம்பு வாயே
 
கலியுகவர தனேபரி மளராசனே
   காத்த சுந்தர மய்யனே
 
வலியுளமன் றினில்கப வினிலேறிட
   மாலை தன்மண வாளனே
 
புலியெனப் பாரினில் சிலையென
   வாழ்ந்திடு மகளரு மணிமார்பனே
 
உலைதனில் மெழுகென வாடினேன்
   எந்தனுக் கருள்செய் வாயே.
 
ஏறவிட்டு ஏணிதன்னை வாங்குகின்ற15
   மண்டலம் தன்னிலே என்னைத்
 
தூரவிட்டு நிற்பதுவும் நியாயமோ
   காத்த வனேதுலக்கமாக
 
பாரைவிட் டோடிவந்து கழுவேறிப்
   பல்லாண்டு பகர்ந்து கூறு
 
சாரியிட்ட வாசியின்மேல் எழுந்துவந்து
   நல்வாக்குச் சாற்று வாயே.
 
பாலகனே உந்தனையான் பரிந்தெடுத்து
   வளர்த்தேனப்பா பாரில் நீயும்
 
சாலகனாய் மாலைதனைச் சிறையெடுக்க
   ராசனுமே சாட்டி யென்னை
 
கோலமுடன் உனைத்தேட விட்டதனால்
   தேசமெங்கும் தேடி வந்தேன்
 
ஆலமுண்ட சிவன்மகனே என்னிடரைத்
   தீர்த்திடவும் அருள் செய்வீரே
 
தீர்த்திடுவாய் எந்தனுட விபத்துத் தன்னை
   திருவருளால் மாலைமண வாள னேகேள்
 
கார்த்திடுவாய் எங்கள் குலம்தழைத் தோங்க
   கருணைபொழிந் தருளுவது கடனு னக்கே
 
பார்த்திடுவாய் எங்கள்பரி தபாந் தன்னை
   பாரைவிட் டோடிவந்து பயனைச் சொல்லி
 
ஏற்றிடுவாய் கழுவேற ஐயா இப்போ
   இரைந்தோடி என்னெதிரே வருகு வாயே