|
இருக்குமிடம் இதுதான் இப்போது காட்டுகிறேன் |
துருசாக வாருமென்று சுத்தியடி பார்த்தார். |
|
பூமரமும் பூநிழலும் பூமரத்தின் கீழேதான் |
சாம்பரமும் வீசச் சருவி விளையாட |
|
ஆணடியும் பெண்ணடியும் அங்குமிகக் கண்டருளி |
ஆணடியைக் கண்டு அளந்து மிகப்பார்த்து |
|
காத்தானுடை பாதமதைக் கண்டு நமஸ்கரித்து |
மாலையுடை பாதமதை மகிழ்ந்துமிகத் தெண்டனிட்டு |
|
வாருங்கள் சேவகரே வர்ண பரிமணம்தான் |
பாருக்குள்ளே ஓடிப் பதுங்கி யிருக்கிறான் |
|
கண்டவுடன் சேப்பிளைக்கு ஞானமது உண்டாகி |
தெண்டனிட்டுத் தோத்திரங்கள் செய்தருளி வாருமென்று |
|
பாரில் நுழைய பயப்பட்டுச் சேப்பிளையான் |
அவர் பேரில் புகழ்ந்து படிக்கிறான் விருத்தமாய் |
விருத்தம் |
அடியை நாவிருத்தம் கண்டேனய்யா |
ஆருதான் பாருக் குள்ளே |
|
துடியதாய் நுழைய நம்மால் |
தோத்துமோ தோத்தா தாலே |
|
மிடியதாய் வரும் விபத்தையே |
விலக்குவான் காத்தான் வந்து |
|
அடியை நான்தேடி வந்தேன் |
அன்புடன் வெளியில் வாரும் |
|
கடியவிஷ முண்டருளும் அரசனுடைய |
பாலகனைக் கருத்தில் வைத்து |
|
படியதனில் உனைத் தொழுதேன் பாலகனே |
எனக்கு வரும் இடர்தனை நீரும் |
|
சடுதியிலே எனைக்காக்கப் பாரைவிட்டு |
ஓடிவந்து சகலோர் காண |