பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்27

இருக்குமிடம் இதுதான் இப்போது காட்டுகிறேன்
துருசாக வாருமென்று சுத்தியடி பார்த்தார்.
 
பூமரமும் பூநிழலும் பூமரத்தின் கீழேதான்
சாம்பரமும் வீசச் சருவி விளையாட
 
ஆணடியும் பெண்ணடியும் அங்குமிகக் கண்டருளி
ஆணடியைக் கண்டு அளந்து மிகப்பார்த்து
 
காத்தானுடை பாதமதைக் கண்டு நமஸ்கரித்து
மாலையுடை பாதமதை மகிழ்ந்துமிகத் தெண்டனிட்டு
 
வாருங்கள் சேவகரே வர்ண பரிமணம்தான்
பாருக்குள்ளே ஓடிப் பதுங்கி யிருக்கிறான்
 
கண்டவுடன் சேப்பிளைக்கு ஞானமது உண்டாகி
தெண்டனிட்டுத் தோத்திரங்கள் செய்தருளி வாருமென்று
 
பாரில் நுழைய பயப்பட்டுச் சேப்பிளையான்
அவர் பேரில் புகழ்ந்து படிக்கிறான் விருத்தமாய்
விருத்தம்
அடியை நாவிருத்தம் கண்டேனய்யா
   ஆருதான் பாருக் குள்ளே
 
துடியதாய் நுழைய நம்மால்
   தோத்துமோ தோத்தா தாலே
 
மிடியதாய் வரும் விபத்தையே
   விலக்குவான் காத்தான் வந்து
 
அடியை நான்தேடி வந்தேன்
   அன்புடன் வெளியில் வாரும்
 
கடியவிஷ முண்டருளும் அரசனுடைய
   பாலகனைக் கருத்தில் வைத்து
 
படியதனில் உனைத் தொழுதேன் பாலகனே
   எனக்கு வரும் இடர்தனை நீரும்
 
சடுதியிலே எனைக்காக்கப் பாரைவிட்டு
   ஓடிவந்து சகலோர் காண