|
| கூடியே கொள்ளடத்துப் படுகைதனை |
| மேற்குமுகங் கொண்டெல் லோரும் |
| |
| நாடியே காத்தவனை தேடுதற்கு |
| என்னுடன் நடந்து வாரீர் |
| |
| வசனம் : சேவகர்களே இனி நாம் கொள்ளடத்துப் படுகையை மேற்கு முகமாகச் சென்று காத்தவனைத் தேடுவோம் சேவகர்களே. |
| நடை |
| கொள்ளடத்துப் படுகைதனைக் கூடியே யெல்லோரும் |
| தேடியும் காத்தவனைக் கண்ணிலே காணோமென்று |
| |
| மெள்ள நடந்தார்கள் மேற்கு முகமாக |
| |
| படுகை முதலாகப் பார்த்துமிக நடந்து |
| திடதிடெனச் சேனைதளம் சேர்ந்து மிகத்தேடி |
| |
| மருச்சலங் காத்தான் வாழ்முதலைப் பரோரம் |
| குறித்து மிகவந்து கூட்டமாய் நின்றார்கள் |
| |
| குத்துநாணல் பாரோரம் கோமுதலைப் பரோரம் |
| சுத்தி நிறைந்ததொரு சூழ விருட்சமதில் |
| |
| குயில்களது கூவ கொஞ்சுகிளி பாடிநிற்க |
| |
| மல்லிகையும் செண்பகமும் மலரெல்லாம் பூத்துநிற்க |
| அல்லி கமலம் அலர்ந்த செந்தாமரையும் |
| |
| காயா மரங்களெலாம் காய்த்து நிறைந்திருக்க |
| பூவா மரங்களெலாம் பூத்துச் சொரியுதங்கே |
| |
| சாம்பிராணி வாசம் சகல பரிமளம்வீசும் |
| சம்பிரமாகக் கண்டான் அதிசயத்தை |
| |
| மேகமது கூடி வெயிலே மறைக்கிறதும் |
| அகமிக மகிழ்ந்திட அனைவோர் புகழ்ந்திட |
| |
| தென்றல் அடிக்கிறதும் தெய்வ சபைபோல |
| கண்டானே சேப்பிளையான் காத்தான் இருப்பிடத்தை14 |
| |
| ஏது புதுமையிது இதற்குமுன் கண்டதில்லை |
| மாது தனையெடுத்த வர்ணபரி மளமும் |