பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்25

கிளியநல்லூர் மாகானம் கீழ்புறம் சிலையாத்தி
விளிதுயிலும் செந்நூல் மேல்முசிறி மாகாணம்
 
அத்தாணி நெக்குப்பை ஆன குமரக்குடி
 
பிட்சாண்டார் கோவில் பேர்பெரிய சன்னதியும்
நச்சரவந் தான்பூண்ட நாதருடன் அம்பலத்தில்
 
இச்சையும் கூத்தாடும் ஈஸ்வரியாள் சன்னதியும்
பச்சைமயில் பரவும் பாச்சூர் திருவளரை
 
கண்ணலூர் கீழ்முசிரி கனல்சொரியும் ஓமாந்தூர்
வண்ணச்ச நல்லூர் வயற்செட்டிபாளையமும்
 
கூத்தூர் பழூர் கறைநாடு பூவாழூர்
நாத்திசையும் கொண்டாடும் நல்லஸ்தலம் சங்கேந்தி
 
வாய்த்த கிளியூர் வழுதூர் தான்முதலாய்
சென்னநதி பரவும் தின்னயமாம் அரியலூர்
 
அன்னங்கள் முட்டையிடும் ஆலம்பாக்க முதலாய்
திருமலைவாடி செப்பாய் விசாரநல்லூர்
 
மருவியே தோன்றும் மான்குடிக்கும் நேர்மேற்கு
பரவும் குறைநாடு வடகரையில் உள்ளதொரு
 
சத்தரம் வாளாடி தத்தனூர் செம்பழனி
உத்தர மருதூர் ஓங்குதிரு மங்கலமாம்
 
சித்தூர் லால்குடி செம்பயனூர் தாளங்குடி
பருத்தி வளர்ந்தோங்கும் பல்லவரம் வெள்ள நல்லூர்13
 
செங்கரும்பு மஞ்சளிஞ்சி தேங்குபிலா பின்னைவனம்
குங்குமம் செவ்வலரி கொளங்கள் தடங்கள்
 
கொளங்கள் தடங்கள் குறைநாட்டில் உள்ளதொரு
குங்குமம் செவ்வலரி கொளங்கள் தடங்கள்
 
கங்குல் பகலாக காவிரிசூழ் வடகரையை
எங்கும் அலைந்து வந்தோம் இனியிடத்தைக் காணோமே
விருத்தம்
தேடியே வடகரை யிலுள்ள
   தொருசீ மையெல் லாமும்
 
ஓடியே அலைந்து வந்தோம்
   என்மகனைக் கண்ட தில்லை