|
| சீக்கிரம் கொண்டு வருகுவேன் |
| யானுமே திருவடி சரணமய்யா |
| |
| அவனியம் புகழ வாழும் |
| ஆரியப் பேந்திர மன்னா |
| |
| கவலையாய் இரண்டு நாடு |
| காலடி பார்த்து வந்தேன் |
| |
| குவலைநற சூலை சூழும் |
| குறைநாடு பார்த்து வாரேன் |
| |
| நவமணிக் கரசு மூன்று |
| நாள்மனுக்12 கொடுத்தருளு வாயே |
| ராசன் சொல் விருத்தம் |
| மன்னவனும் மனதிரங்கி வடகரையும் |
| குறைநாடும் வளைந்து பார்த்து |
| |
| தென்னவனைப் பிடித்துவந்தால் உனக்குத் |
| தேவை யுண்டு மரியாதை |
| |
| சொர்ணமது யான்கொடுப்பேன் இல்லா |
| விட்டால் அவனேறும் கழுவினிலே |
| |
| உன்னைமிக ஏத்துவேனே உலகறிய |
| சத்தியமாயுரை செய்குவானே |
| |
| வசனம் : ஆகோ கேளும் அரசு காவல் சேப்பிளையானே. இன்னும் மூன்று நாளில் காத்தவனைப் பிடித்துவந்தால் உனக்கு வெகுமதி செய்வேன். இல்லாவிட்டால் உன்னை கழுவில் ஏற்றுவேன். |
| நடை |
| கேசரமாய்ச் சேனையுடன் சேப்பிளையான் அப்போது |
| வேகமுடன் ஊர்தோறும் விதவிதமாய் தேடுகிறான் |
| |
| அயலூர் நேர்கிழக்கு அரியலூர் நேர்மேற்கு |
| ஜெயமிகுந்திடு முசிரி திருவோங்கி நாதர்மலை |
| |
| ஆமூர் மணமேடு அழகான தொட்டியமாம் |
| காமுதலாப் பாரும் குணசீல மங்கலமாம் |
| |
| சுண்டைக்காய் வெள்ளூர் சோலை மருச்சலங்கத்தான் |
| வண்டாடும் பூஞ்சோலை வாழ்முதலைப் பாரோரம் |