பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்23

 
     வசனம் : ராஜாதி ராஜனே தேவரீர் உத்தரவின் பிரகாரம் ஒருவாரம் தென்கரையும் நடுக்கரையும் தேடியும் காத்தவனைக் கண்டிலேன் ; நான் என்ன செய்வேன் சுவாமி.
சந்திரசூரியர் தனபதியுள்ளவும் தைரியமுடையதோர் ஆரிய
   ராசனும் தன்மனம் பதறி
 
உந்தனையானும் நிபந்தனையாகவே உயிர்க்கழுவில் போடுவதோ
   உறுதியாய்நீ வளர்த்திடும் பாலனைப் போடுவதோ
 
சிந்தையில் தோன்றிவேந்திட உன்மனம்
   தெரியநீ உரைத்திடுவாய்
 
சீறிய ராசனம் கூரியவாளொடு சத்தியவாய்
   மனமயங்கியே நின்றிடத் தயங்கியே
 
சேப்பிளையான் தாள்கள் பணிந்திடவாய்கள்
   புதைத்திடத் தானுரை செய்குவாயே
 
     வசனம் : ஆகோ கேளங்கள் அரசுகாவல் சேப்பிளையானே ஒரு வாரமாகத் தேடி காத்தவனைக் கண்ணி்ல் காணோமென்று நம்மிடம் வஞ்ச வார்த்தை பேசுகிறாய். அவனுக்குச் செப்பனிட்ட கழுவில் அவனைப் போடுவதா அல்லது உன்னைப் போடுவதா சொல்லும் பிள்ளாய், சேப்பிளையே.
புத்தமிர்த நிகராத பொறுமையது
   பெற்றிடும் புருஷனே ராசசிங்கா
 
புத்தியில் கற்பக விளிபோல்
   விளங்கிடும் புருஷனே ராசசிங்கா
 
வித்தையில் வெண்தா மரையொத்த
   ராசனே புருஷ சிங்கா
 
இத்தரணி கனாகவே யேகா நதியில்
   சூரிய விலாசனே புருஷசிங்கா
 
பெற்றதால் புத்திரர்கள் செய்குற்றம்
   பெற்றோர் பொறுப்பது போலவே
 
புண்ணியா பொறுத்தெனக்கு இன்னமும்
   போகவே மூன்று நாளும்
 
சித்தமாய்நீர் அருள்கொண்டு என்னை
   இரட்சியும் திருடனையான் பிடித்துச்