|
| திருவளர் சோலை திருப்பிலா நல்துறையும் |
| நறுமலர் சூழ திம்மராய சமுத்திரமாம் |
| |
| வெண்ணாவின்கீழே முறைத்தெழுந்த ஐம்புலிங்கம் |
| கண்ணான கங்கைச் சடையன்திருச் சன்னதியும் |
| |
| வெள்ளித் திருமுத்தம் மேலூர் மறையவர்க்கு |
| அள்ளித் தினங்கொடுக்கும் அரங்கர் திருச்சன்னதியும் |
| |
| மின்னல் இடிபணியும் வீரேஸ்புரத் தில்வந்து |
| கன்னல் மொழியம்மாள் காமாட்சி சன்னதியும் |
| |
| சேனை படையுடனே சீரங்கம் தான்தேடி |
| ஆனை மணிமுழங்கும் அரங்கர் திருச்சன்னதியும் |
| |
| அனுமார் படித்துறையும் அரங்கர்திருச் சன்னதியும் |
| பெருமாள் தலைக்கோம்பை பேருள்ள ரங்கர்தலம்11 |
| |
| ஆதியாங் கொள்ளிடத்து அருங்கரையின் வெள்ளத்து |
| ஆணலையும் பெண்ணலையும் அதிர அலம்பையிலே |
| |
| காண அரிதான கட்டழகன் சேப்பிளையான் |
| கல்லில் அடியெடுத்தால் தப்படியில் அடியெடுப்பான் |
| |
| முள்ளில் அடியெடுத்தால் மேட்டில் அடியெடுப்பான் |
| தண்ணீரில் அடியெடுத்தால் தப்படியில் அடியெடுப்பான் |
| |
| எண்ணிய இடமதில் எங்கும் அடிபார்த்து |
| தலைக்கோரை நேர்கிழக்கு சரியாய் நடுக்கரையை |
| |
| கலக்கமறத்தேடிக் காத்தவனைக் காணாமல் |
| வாடி மனம்தளர்ந்து மயங்கியே சேப்பிளையான் |
| |
| ஒடியே வந்து உகந்துகண்டான் ராசாவை. |
| சேப்பிளை ராசனுக்கு சொல்விருத்தம் |
| தென்னாடு காவேரிச் சீமையெலாம் |
| தேடிவந்த தேன்நான் மன்னவனே |
| |
| மாலையரைக் களவெடுத்துச் சென்ற |
| மகனையும் நான் காணேனே |
| |
| பொன்னான பூவுலகில் அவனாலே |
| யானடியேன் புவியி லய்யா |
| |
| என்னநான் சொல்குவேன் இப்போ |
| ராசனுமே எதிர் சொல்வாயே |