பக்கம் எண் :

42காத்தவராயன் கதைப்பாடல்

ஊரிலே யாரேனும் ஓடியே தேடிவந்தால்
நானழைத்துப் போறேனென்று நலமாகச் சொல்லுமென்று
 
மங்கையரை யானும் மணமுடித்தேன் கண்டீரே
பட்டமது ; கட்டிவைத்து பார்தனிலே நீர்வந்து
 
திட்டமது செய்தீர்காண் செப்புகிறேன் இப்போது
சருவியே ஒருவர்தனைச் சலுகையால் சொல்ல வேண்டாம்
 
அரிவையே என்மேலாசை ஆகவே கொண்டுவந்தால்
மருவவே பயப்படாதே மனமதுப் பொருத்தங் கண்டாய்
 
திறமுடன் பாதிகாவல் காத்திடாய் எனப்பகுந்தீர்
ஆசையாய் தொடர்ந்தபெண்ணை அருஞ்சிறை வைத்தேனல்லால்
 
நேசமாய் நடக்கைதப்பி நீணிலம் தன்னிலிப்போ
மோசமே செய்துன்றன் முறையது தப்பேனய்யா
 
தேசமே பாதிகாவல் சேப்பிளையின் மகன்நானே
குற்றங்கள் ஏதுமுண்டோ கொற்றவனே நீர்பாரும்
 
தேச மறிந்திடவே செய்குற்றம் நீ பொறுத்து
நடந்த வரலாறு நானுரைத்தேன் மன்னவனே
 
கடநத் மொழியுரைப்பேன் கட்டுரைக்கக் கேட்டருள்வாய்
காத்தவனார் சொன்னதைக் கண்டுமிக ராசாவும்
 
பாத்துப் பரிமளத்தை பரிமளத்தின் தன்னழகை
திங்கள் உதித்தாற்போல் சிவன்கலையும் ஏதுனக்கு
 
பொங்கமுடன் உருத்ராட்சம் பூண்டதொரு வாறேது
அரிவாள் மடக்கை அணிந்ததொருகிண்ணாரம்
 
மருவிலாப் பொன்னுருமாள் மார்நிறைந்த பூணூல்
மகிழம்பூ மாலை வந்த வழிதனையே
 
புகலவே நீரும் இந்த வகைதனையே
சொந்தமுடன் நீரும் தெரிய உரையுமென்றார்.