|
| ஊரிலே யாரேனும் ஓடியே தேடிவந்தால் |
| நானழைத்துப் போறேனென்று நலமாகச் சொல்லுமென்று |
| |
| மங்கையரை யானும் மணமுடித்தேன் கண்டீரே |
| பட்டமது ; கட்டிவைத்து பார்தனிலே நீர்வந்து |
| |
| திட்டமது செய்தீர்காண் செப்புகிறேன் இப்போது |
| சருவியே ஒருவர்தனைச் சலுகையால் சொல்ல வேண்டாம் |
| |
| அரிவையே என்மேலாசை ஆகவே கொண்டுவந்தால் |
| மருவவே பயப்படாதே மனமதுப் பொருத்தங் கண்டாய் |
| |
| திறமுடன் பாதிகாவல் காத்திடாய் எனப்பகுந்தீர் |
| ஆசையாய் தொடர்ந்தபெண்ணை அருஞ்சிறை வைத்தேனல்லால் |
| |
| நேசமாய் நடக்கைதப்பி நீணிலம் தன்னிலிப்போ |
| மோசமே செய்துன்றன் முறையது தப்பேனய்யா |
| |
| தேசமே பாதிகாவல் சேப்பிளையின் மகன்நானே |
| குற்றங்கள் ஏதுமுண்டோ கொற்றவனே நீர்பாரும் |
| |
| தேச மறிந்திடவே செய்குற்றம் நீ பொறுத்து |
| நடந்த வரலாறு நானுரைத்தேன் மன்னவனே |
| |
| கடநத் மொழியுரைப்பேன் கட்டுரைக்கக் கேட்டருள்வாய் |
| காத்தவனார் சொன்னதைக் கண்டுமிக ராசாவும் |
| |
| பாத்துப் பரிமளத்தை பரிமளத்தின் தன்னழகை |
| திங்கள் உதித்தாற்போல் சிவன்கலையும் ஏதுனக்கு |
| |
| பொங்கமுடன் உருத்ராட்சம் பூண்டதொரு வாறேது |
| அரிவாள் மடக்கை அணிந்ததொருகிண்ணாரம் |
| |
| மருவிலாப் பொன்னுருமாள் மார்நிறைந்த பூணூல் |
| மகிழம்பூ மாலை வந்த வழிதனையே |
| |
| புகலவே நீரும் இந்த வகைதனையே |
| சொந்தமுடன் நீரும் தெரிய உரையுமென்றார். |