|
| மலையதிர்ந்து சாய்ந்தாலும் |
| மனங்கலங்கா காத்தவனே |
| மகிழக் கேளும் |
| |
| சிலையதிர மல்லர்களைச் |
| சிரம்துணித்த சேவகனே |
| சப்புவோம் யாம் |
| |
| நிலைகலங்கி மதிமயங்கி |
| சேப்பிளையான் பிள்ளையெனச் |
| சுற்றினாய் நீ |
| |
| உலகமதில் உவப்புடனே |
| நீபிறந்த வரலாறுதனை |
| உணரச் செய்வாயே |
| |
| |
| ராசன் உரைத்தருள நல்ல பரிமணமும் |
| நேசமுடன் தான்பிறந்த நெடியகதை சொல்லுகிறார் |
| |
| வெள்ளிமலை வீற்றிருக்கும் விமலன் அருளாலே |
| புள்ளி மான் வயிற்றில் பிறந்தேனே பூலோகம் |
| |
| நந்தவம் காக்க நவின்றாரே ஈஸ்வரனார் |
| அந்த மொழிதப்பாமல் ஐவனமும் காத்துவந்தேன் |
| |
| வந்தார்கள் ஏழுகன்னி மலர்கள் பறிப்பதற்கு |
| அந்தமுடன் கன்னியர்கள் அவர்கள் நீராடையிலே |
| |
| வந்துஒரு கன்னியுட வர்ணத் துகிலெடுத்தேன் |
| பந்தமுடன் நேமமதில் பாங்காய் ஒளிந்திருந்தேன் |
| |
| ஆறாடிக் கன்னியர்கள் அவர்கள் துகிலுடுத்தி |
| சீரான கன்னியரில் தேவி ஒருத்தியொட |
| |
| துகில்தனையே காணாமல் தேடியே பார்ப்பளவில் |
| மயில் போல யானடியேன் மரத்தில் இருந்ததனால் |
| |
| கன்னியர்கள் யாரென்றே கண்டு கேட்பளவில் |
| ஒண்டொடி மானீன்ற உத்தமன் நானென்றேன் |
| |
| ஆறுபேர் தானோடி அரனார்க்கு உரைத்திடவே |
| பாருலகில் ஈசனார் பார்ப்பார வம்சத்தில் |
| |
| அனந்த நாராயணார் அவர்க்குப் புத்திரனாய் |
| புனத்திலே தானெறிய புலச்சியெனை யெடுத்து |