பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்43

மலையதிர்ந்து சாய்ந்தாலும்
   மனங்கலங்கா காத்தவனே
   மகிழக் கேளும்
 
சிலையதிர மல்லர்களைச்
   சிரம்துணித்த சேவகனே
   சப்புவோம் யாம்
 
நிலைகலங்கி மதிமயங்கி
   சேப்பிளையான் பிள்ளையெனச்
   சுற்றினாய் நீ
 
உலகமதில் உவப்புடனே
   நீபிறந்த வரலாறுதனை
   உணரச் செய்வாயே
 
 
ராசன் உரைத்தருள நல்ல பரிமணமும்
நேசமுடன் தான்பிறந்த நெடியகதை சொல்லுகிறார்
 
வெள்ளிமலை வீற்றிருக்கும் விமலன் அருளாலே
புள்ளி மான் வயிற்றில் பிறந்தேனே பூலோகம்
 
நந்தவம் காக்க நவின்றாரே ஈஸ்வரனார்
அந்த மொழிதப்பாமல் ஐவனமும் காத்துவந்தேன்
 
வந்தார்கள் ஏழுகன்னி மலர்கள் பறிப்பதற்கு
அந்தமுடன் கன்னியர்கள் அவர்கள் நீராடையிலே
 
வந்துஒரு கன்னியுட வர்ணத் துகிலெடுத்தேன்
பந்தமுடன் நேமமதில் பாங்காய் ஒளிந்திருந்தேன்
 
ஆறாடிக் கன்னியர்கள் அவர்கள் துகிலுடுத்தி
சீரான கன்னியரில் தேவி ஒருத்தியொட
 
துகில்தனையே காணாமல் தேடியே பார்ப்பளவில்
மயில் போல யானடியேன் மரத்தில் இருந்ததனால்
 
கன்னியர்கள் யாரென்றே கண்டு கேட்பளவில்
ஒண்டொடி மானீன்ற உத்தமன் நானென்றேன்
 
ஆறுபேர் தானோடி அரனார்க்கு உரைத்திடவே
பாருலகில் ஈசனார் பார்ப்பார வம்சத்தில்
 
அனந்த நாராயணார் அவர்க்குப் புத்திரனாய்
புனத்திலே தானெறிய புலச்சியெனை யெடுத்து