|
| மூன்று நாள் பறைச்சி முலையுண்டு வீற்றிருப்பாய் |
| சேப்பிளை மனையாளாம் சங்கப்பிள்ளை வளர்ப்பாளே. |
| |
| சோமாசி வயிற்றில் சுந்தரமாய் பிறப்பாள் |
| காமரதி தனையே கண்டு சிறையெடுப்பாய் |
| |
| ஆறுபேர் கன்னியர்கள் அன்புயைட மங்கையராய் |
| சீருடனே வாய்த்திடு வார் சிறந்த கழுவேறி |
| |
| நம்மிடத்தில் வாருமென்று நவின்றாரே அந்நாளில் |
| |
| அன்றிட்ட சாபமதால் அடியேனும் பூலோகம் |
| பிறந்தவிபரம் சொன்னேன் புண்ணியரே நீர்கேளும் |
| |
| பூதலத்தில் காத்தவனே |
| பிறந்ததொரு வகையினையே |
| புகன்றாய் நீயும் |
| |
| தாதுபுனல் மாலைதனை |
| சிறையெடுத்தாய் ஒருத்தியென |
| சரிதான் இப்போ |
| |
| ஆதரவாய் ஆறுகன்னி |
| பிறந்தவிடம் எந்தனுக்குப் |
| பொறுமை யாக |
| |
| நீதயவாய் உரைத்திடுவாய் |
| நிச்சயத்தை யானறிய |
| நவிலு வாயே. |
| |
| |
| வசனம் : ஆகோ கேளும் காத்தவராயனே சிவனுடைய சாபத்தினால் ஏழு கன்னியர் பிறந்ததும் சொன்னதும் சரி. அவர்களுக்கும் உனக்கும் உறவானதைச் சொல்லுவாய். |
| |
| வாருமையா சொல்லுகிறேன் வந்த வகைதனையே |
| நாறுமலர்க் குழலாள் நலமான மங்கையரும் |
| |
| ஆரியமாலையும் ஐய்யர் வயிற்றிலே யுதித்தாள் |
| |
| வயிரசெட்டி பாளையத்தில் வளமான ஓந்தாயி |
| மயிரழகி ஆகியதோர் மங்கையராய் தான்பிறந்தாள் |
| |
| களத்தூரில் இருக்கும் கனத்த சலுப்பரிடம் |
| சலுப்பச்சி என்றுமவள் சவுதாயி தான்பிறந்தாள் |