|
மூன்று நாள் பறைச்சி முலையுண்டு வீற்றிருப்பாய் |
சேப்பிளை மனையாளாம் சங்கப்பிள்ளை வளர்ப்பாளே. |
|
சோமாசி வயிற்றில் சுந்தரமாய் பிறப்பாள் |
காமரதி தனையே கண்டு சிறையெடுப்பாய் |
|
ஆறுபேர் கன்னியர்கள் அன்புயைட மங்கையராய் |
சீருடனே வாய்த்திடு வார் சிறந்த கழுவேறி |
|
நம்மிடத்தில் வாருமென்று நவின்றாரே அந்நாளில் |
|
அன்றிட்ட சாபமதால் அடியேனும் பூலோகம் |
பிறந்தவிபரம் சொன்னேன் புண்ணியரே நீர்கேளும் |
|
பூதலத்தில் காத்தவனே |
பிறந்ததொரு வகையினையே |
புகன்றாய் நீயும் |
|
தாதுபுனல் மாலைதனை |
சிறையெடுத்தாய் ஒருத்தியென |
சரிதான் இப்போ |
|
ஆதரவாய் ஆறுகன்னி |
பிறந்தவிடம் எந்தனுக்குப் |
பொறுமை யாக |
|
நீதயவாய் உரைத்திடுவாய் |
நிச்சயத்தை யானறிய |
நவிலு வாயே. |
|
|
வசனம் : ஆகோ கேளும் காத்தவராயனே சிவனுடைய சாபத்தினால் ஏழு கன்னியர் பிறந்ததும் சொன்னதும் சரி. அவர்களுக்கும் உனக்கும் உறவானதைச் சொல்லுவாய். |
|
வாருமையா சொல்லுகிறேன் வந்த வகைதனையே |
நாறுமலர்க் குழலாள் நலமான மங்கையரும் |
|
ஆரியமாலையும் ஐய்யர் வயிற்றிலே யுதித்தாள் |
|
வயிரசெட்டி பாளையத்தில் வளமான ஓந்தாயி |
மயிரழகி ஆகியதோர் மங்கையராய் தான்பிறந்தாள் |
|
களத்தூரில் இருக்கும் கனத்த சலுப்பரிடம் |
சலுப்பச்சி என்றுமவள் சவுதாயி தான்பிறந்தாள் |