|
| ஆட்பாடி தன்னில் ஆன இடைக்குலத்தில் |
| வாய்ப்பாகக் கருப்பாயி வந்துமிகத் தான்பிறந்தாள் |
| |
| காச்சி மதுவெடுக்கும் கனத்ததொரு குலத்தில் |
| பாச்சூரில் பூவாயி பாங்காய் பிறந்திருந்தாள் |
| |
| மாவடி மங்கலத்தில் வாழும் இடைக்குலத்தில் |
| ஞானியவள் நல்லதங்காள் நன்றாய் பிறந்திருந்தாள் |
| |
| பொன்னான பூவுலகில் புத்தூர் கிராமத்தில் |
| வண்ணார நல்லியென வந்துமிகப் பிறந்தாள் |
| |
| கனத்த தவமிகுந்த களத்தூர் மாநகரில் |
| அனந்த நாராயணர் அவர்தனக்கு நான்பிறந்தேன் |
| |
| துங்க சோமாசிக்கு சிறந்த உடன்பிறப்பு |
| மங்காயி தன்வயிற்றில் மகிழ்ந்து பிறந்தேனே |
| |
| ஆறுபேர் பிறந்தவகை சொன்னதனால் |
| யாம்கேட்டோம் அவர் தனக்கு |
| சீருடனே உந்தனுட தொடர்பு |
| நடந்தவகை திறமதாகக் |
| |
| கூறுமென்று ராசனவர் கேட்டிடவே |
| காத்தவனார் குணமதாக |
| பாருமையா கன்னியிடம் யானுறவாய் |
| நடந்தவகை பகருவேனே. |
| |
| அரனடி பணிந்தேற்றும் அனந்த நாராயணனார் |
| அவர் வயிற்றிலே பிறந்தேன் |
| அன்புடைய சோமாசி அய்யர்க்குப் புத்திரியாய் |
| ஆரிய மாலைவந்தாள் |
| |
| |
| வரமுடைய ஓந்தாயி செட்டிகுலம் தன்னில் |
| வயிரசெட்டி பாளையத்தில் |
| வந்தே பிறந்திட அவளையே சிறைகொண்டு |
| வைத்தேன் முதலைப்பாரில் |
| |
| திறமுடைய சலுப்பச்சி யாகவே சவுதாயி |
| சென்றங்கு பிறந்திட |
| யானவ்விடம் சென்று திறமுடனே களத்தூரில் |
| கோழி கொன்றேன் |