பக்கம் எண் :

46காத்தவராயன் கதைப்பாடல்

அறமது விளங்கிடும் ஆட்பாடி தன்னில்
   அழகுகருப் பாயியென்று
அவளும் பிறந்திடயான் அவ்விடம் சென்றவள்
   தயிர்மோர் குடித்தேன்
 
நிரையுடன் புத்தூரில் வாழ்கின்ற வண்ணார
   நல்லியன்றே பிறந்தாள்
நின்றவள் மனைசென்ற பால்வாங்கி மாலைக்கு
   நெறியுடன் கொடுத்துவந்தேன்
 
சிறையுடன் பாவாணர் புகழ்கின்ற பாச்சூரில்
   திறமுடைய பூவாயியாய்
சென்றுமவள் பிறந்திட யானவ்விடம் சென்று
   திறமுடன் மதுகுடித்தேன்
 
உரமுடன் சொல்லுகிறேன் உத்தமனே தூண்டியும்
   உறுத்தவே வாடிநிற்பேன்
உயிர்க்கழுவில் இருக்குமவ் வேளையில் இடைக்குலம்
   உதித்திடும் நல்லதங்காள்
 
தாகமுடன் மோர்கொண்டு என்தாகமது தணித்திட
   தையலொருத்தி யாய்வருவாள்
தானெழுவர் கன்னியுடன் சாபமது பெற்றுயான்
   தாரணியில் வந்தவாரே
 
 
காத்தவனார் சொன்னதையும் கண்டுமிக ராசாவும்
ஏத்தமுள காத்தவனை இன்பமுடன கொண்டாடி
 
காரியக் காரர் கனத்தசபை மந்திரிகள்
சீரிய சந்தோஷமுடன் சிறப்பு மிகவருளி
 
அந்தப் பிழைபொறுத்து ஆள்கடுமை கொண்டதுபோல்
இந்தப் பிழைதனைநாம் இப்போதுதான் பொறுத்தோம்
 
பருவமுடன் கூடியதோர் பாவையாள் தன்னுடனே
திருவரங்கம் பேட்டை தலத்தில் எழுந்தருளி
 
மாலையுடன் நீரும் வையகத்தில் எந்நாளும்
சாலவே வாழ்ந்திருங்காண் தம்பி பரிமணமே.