|
| அறமது விளங்கிடும் ஆட்பாடி தன்னில் |
| அழகுகருப் பாயியென்று |
| அவளும் பிறந்திடயான் அவ்விடம் சென்றவள் |
| தயிர்மோர் குடித்தேன் |
| |
| நிரையுடன் புத்தூரில் வாழ்கின்ற வண்ணார |
| நல்லியன்றே பிறந்தாள் |
| நின்றவள் மனைசென்ற பால்வாங்கி மாலைக்கு |
| நெறியுடன் கொடுத்துவந்தேன் |
| |
| சிறையுடன் பாவாணர் புகழ்கின்ற பாச்சூரில் |
| திறமுடைய பூவாயியாய் |
| சென்றுமவள் பிறந்திட யானவ்விடம் சென்று |
| திறமுடன் மதுகுடித்தேன் |
| |
| உரமுடன் சொல்லுகிறேன் உத்தமனே தூண்டியும் |
| உறுத்தவே வாடிநிற்பேன் |
| உயிர்க்கழுவில் இருக்குமவ் வேளையில் இடைக்குலம் |
| உதித்திடும் நல்லதங்காள் |
| |
| தாகமுடன் மோர்கொண்டு என்தாகமது தணித்திட |
| தையலொருத்தி யாய்வருவாள் |
| தானெழுவர் கன்னியுடன் சாபமது பெற்றுயான் |
| தாரணியில் வந்தவாரே |
| |
| |
| காத்தவனார் சொன்னதையும் கண்டுமிக ராசாவும் |
| ஏத்தமுள காத்தவனை இன்பமுடன கொண்டாடி |
| |
| காரியக் காரர் கனத்தசபை மந்திரிகள் |
| சீரிய சந்தோஷமுடன் சிறப்பு மிகவருளி |
| |
| அந்தப் பிழைபொறுத்து ஆள்கடுமை கொண்டதுபோல் |
| இந்தப் பிழைதனைநாம் இப்போதுதான் பொறுத்தோம் |
| |
| பருவமுடன் கூடியதோர் பாவையாள் தன்னுடனே |
| திருவரங்கம் பேட்டை தலத்தில் எழுந்தருளி |
| |
| மாலையுடன் நீரும் வையகத்தில் எந்நாளும் |
| சாலவே வாழ்ந்திருங்காண் தம்பி பரிமணமே. |