|
ஆலமே உண்ட ஈசன் |
அரனருள் புத்திரா கேளும் |
கோலமாய்க் களவு செய்து |
|
கொண்டுபோய் பாரில் வைத்து |
மாலையும் நீருமாக |
வையகத் தன்னில் வாழ்வீர் |
|
|
வசனம் : ஆகோ கேளும் பிள்ளாய் காத்தவராயனே ஆரிய மாலை சேப்பிளையானுடன் திருவரங்கப்பட்டியில் இரும்பிள்ளாய் காத்தவராயனே. |
|
அரசன் உரைத்திடவே அய்யமார் சோமாசி |
பிரியமுடன் வேதியர்கள் பிரபலமாய்க் கொண்டாடி |
|
மங்காயி பெற்றெடுத்த மைந்தனென்று சொன்னீரே |
அங்கவளும் பெற்றிடுநாள் அப்போது நாங்களெலாம் |
|
வனத்தில் எறிந்ததொரு மன்னவனும் நீர்தானோ |
புனத்தில் எறிந்ததொரு புண்ணியனும் நீர்தானோ |
|
எங்களுட பெண்ணாலே இறந்திட வேண்டாங்காண் |
பொங்கமுடன் நாங்களும் பொன்னான மாலையரை |
|
நாங்கள் ஒருமனதாய் நலமான மாலையரை |
தாங்கி மணமுடித்துத் தாரோங்காண் காத்தவனே |
|
சத்தமாய் மாலையரை தாரைமிக வார்த்து |
புத்தியுட நாங்களெல்லாம் பொருந்தி மணமுடித்து |
|
சித்தமுடன் செய்து தருகிறோம் என்று சொல்லி |
புத்தியுள்ள காத்தவனே என்று புகழ்ந்தார்கள். |
|
சிலைமதவேள் குடைய காத்தவனே |
உந்தனுக்குச் செப்புவோம் யாம் |
அலைபுகழும் களத்தூர் அனந்த |
நாராயணார் அவர்தன் தேவி |
|
சிலைபொருது மங்காயி செல்வனென |
எங்களுக்குத் தெரிந்த காலே |
விலைமதியா மாலையரை உந்தனுக்கே |
மணமுடிப்பேன் விரையுள் ளோனே |