|
| ஆலமே உண்ட ஈசன் |
| அரனருள் புத்திரா கேளும் |
| கோலமாய்க் களவு செய்து |
| |
| கொண்டுபோய் பாரில் வைத்து |
| மாலையும் நீருமாக |
| வையகத் தன்னில் வாழ்வீர் |
| |
| |
| வசனம் : ஆகோ கேளும் பிள்ளாய் காத்தவராயனே ஆரிய மாலை சேப்பிளையானுடன் திருவரங்கப்பட்டியில் இரும்பிள்ளாய் காத்தவராயனே. |
| |
| அரசன் உரைத்திடவே அய்யமார் சோமாசி |
| பிரியமுடன் வேதியர்கள் பிரபலமாய்க் கொண்டாடி |
| |
| மங்காயி பெற்றெடுத்த மைந்தனென்று சொன்னீரே |
| அங்கவளும் பெற்றிடுநாள் அப்போது நாங்களெலாம் |
| |
| வனத்தில் எறிந்ததொரு மன்னவனும் நீர்தானோ |
| புனத்தில் எறிந்ததொரு புண்ணியனும் நீர்தானோ |
| |
| எங்களுட பெண்ணாலே இறந்திட வேண்டாங்காண் |
| பொங்கமுடன் நாங்களும் பொன்னான மாலையரை |
| |
| நாங்கள் ஒருமனதாய் நலமான மாலையரை |
| தாங்கி மணமுடித்துத் தாரோங்காண் காத்தவனே |
| |
| சத்தமாய் மாலையரை தாரைமிக வார்த்து |
| புத்தியுட நாங்களெல்லாம் பொருந்தி மணமுடித்து |
| |
| சித்தமுடன் செய்து தருகிறோம் என்று சொல்லி |
| புத்தியுள்ள காத்தவனே என்று புகழ்ந்தார்கள். |
| |
| சிலைமதவேள் குடைய காத்தவனே |
| உந்தனுக்குச் செப்புவோம் யாம் |
| அலைபுகழும் களத்தூர் அனந்த |
| நாராயணார் அவர்தன் தேவி |
| |
| சிலைபொருது மங்காயி செல்வனென |
| எங்களுக்குத் தெரிந்த காலே |
| விலைமதியா மாலையரை உந்தனுக்கே |
| மணமுடிப்பேன் விரையுள் ளோனே |