|
| அய்யமார் சொல்ல அடிபணிந்து காத்தவனார் |
| மெய்யான வார்த்தை விளம்புகிறேன் கேட்டருள்வீர் |
| |
| பெற்றாளே பிராமணத்தி பேருமிட்டான் சேப்பிளையான் |
| முத்தாலே ஆபரணம் மோதிரங்கள் கையிலிட்டு |
| |
| வளர்த்தாளே சங்கப்பிள்ளை வந்துதித்த சாபமிது |
| தழைத்தபுகழ் மன்னவரே சாற்றுகிறேன் கேளுமினி |
| |
| ஆரிட்ட சாபம் அழிந்தாலும் வையகத்தில் |
| மாதாயிட்ட சாபம் மறக்கேன் கனாவிலையும் |
| |
| அரனார் வயது பதினாறிலே வாருமென்றார் |
| திறமானதோர் வயது சென்றதுகாண் இன்றோடே |
| |
| பங்குனி மாதம் பதினைந்தாம் தேதியிலே |
| பொங்கும் பௌர்ணமி பூரணச் சந்திரனில் |
| |
| வெள்ளிக் கிழமை விடியவொரு சாமமதில் |
| தெள்ளியசொல் மாலையினால் செட்டிப் பெண் ஓந்தாயியால் |
| |
| கரிச்சானும் கத்தி கிழக்கே வெளுக்குமுன்னே |
| தாழ்ச்சியது இல்லாமல் தானே உயிர்த் தூண்டியிலே |
| |
| இருப்பாய் கழுவிலென்று ஈஸ்பரனார் சாபமிட்டார் |
| விருப்பமுடன் கழுவில் வீற்றிருக்க வேணுமினி |
| |
| நிற்கவென்றால் எந்தனுக்கு நீதியல்ல ராசாவே |
| தாமதமும் பண்ணாமல் தானே யனுப்பினியால் |
| |
| உமக்கும் புகழ்கிடைக்கும் உம்மாலே எந்தனுக்கு |
| சேமம் பெறலாம் இப்போதே அனுப்புமென்றார். |
| |
| |
| நன்னிய மறை யோர்க்கிந்த |
| நல்லதாம் வார்த்தை சொல்லி |
| |
| உன்னிய பூரு வத்தை |
| உரைத்தேன் யான் எல்லோர்க்கும் |
| |
| மன்னியே சிறை யெடுத்த |
| மண்ணினில் இருக்கொ ணாது |
| |
| கன்னிதன் பொருட்டி னாலே |
| கழுவினில் ஏறு வேனே. |