|
அய்யமார் சொல்ல அடிபணிந்து காத்தவனார் |
மெய்யான வார்த்தை விளம்புகிறேன் கேட்டருள்வீர் |
|
பெற்றாளே பிராமணத்தி பேருமிட்டான் சேப்பிளையான் |
முத்தாலே ஆபரணம் மோதிரங்கள் கையிலிட்டு |
|
வளர்த்தாளே சங்கப்பிள்ளை வந்துதித்த சாபமிது |
தழைத்தபுகழ் மன்னவரே சாற்றுகிறேன் கேளுமினி |
|
ஆரிட்ட சாபம் அழிந்தாலும் வையகத்தில் |
மாதாயிட்ட சாபம் மறக்கேன் கனாவிலையும் |
|
அரனார் வயது பதினாறிலே வாருமென்றார் |
திறமானதோர் வயது சென்றதுகாண் இன்றோடே |
|
பங்குனி மாதம் பதினைந்தாம் தேதியிலே |
பொங்கும் பௌர்ணமி பூரணச் சந்திரனில் |
|
வெள்ளிக் கிழமை விடியவொரு சாமமதில் |
தெள்ளியசொல் மாலையினால் செட்டிப் பெண் ஓந்தாயியால் |
|
கரிச்சானும் கத்தி கிழக்கே வெளுக்குமுன்னே |
தாழ்ச்சியது இல்லாமல் தானே உயிர்த் தூண்டியிலே |
|
இருப்பாய் கழுவிலென்று ஈஸ்பரனார் சாபமிட்டார் |
விருப்பமுடன் கழுவில் வீற்றிருக்க வேணுமினி |
|
நிற்கவென்றால் எந்தனுக்கு நீதியல்ல ராசாவே |
தாமதமும் பண்ணாமல் தானே யனுப்பினியால் |
|
உமக்கும் புகழ்கிடைக்கும் உம்மாலே எந்தனுக்கு |
சேமம் பெறலாம் இப்போதே அனுப்புமென்றார். |
|
|
நன்னிய மறை யோர்க்கிந்த |
நல்லதாம் வார்த்தை சொல்லி |
|
உன்னிய பூரு வத்தை |
உரைத்தேன் யான் எல்லோர்க்கும் |
|
மன்னியே சிறை யெடுத்த |
மண்ணினில் இருக்கொ ணாது |
|
கன்னிதன் பொருட்டி னாலே |
கழுவினில் ஏறு வேனே. |