|
| காத்தவனார் சொல்வதையும் கண்டுமிக ராசாவும் |
| பார்த்துப் பரிமளத்தை பரிமளத்தின் தன்னழகை |
| |
| அழகை எழுதினவன் அதிர்ஷ்டம் எழுதாமல் |
| இளமைப் பிறாயத்தில் ஏறிக் கழுவிருக்க |
| |
| ஆயன் எழுத்தை அறியவே போகாது |
| மாயன் கபடமதை மறிக்கவே போகாது |
| |
| வருந்திமிக ராசன் மகராசன் காத்தவர்க்கு |
| விருந்துமிகச் செய்துவைத்து வீரமுடி மன்னவனார் |
| |
| போவென் றனுப்பிடவே பூநூல் மார்பழகன் |
| அகிலாண்ட வல்லியுமை அடிபணிந்த பின்னருமே |
| |
| ஆட்சியுடன் அருள்பெற்று ஆசாரி கொல்லருடன் |
| ஆட்சியுடன் கழுவிருக்க அருளோடு வாராரே |
| |
| காரியக் காரரெல்லாம் கண்டு மனதுருகி |
| |
| வேதியர் களெல்லாம் வெந்து மனதுருகி |
| சோதனையாய் காணுதற்கு சொல்லி மனதுருகி |
| |
| தன்னை வளர்த்தருளும் தாயாரும் சங்கப்பிள்ளை |
| அன்னம் போல்வாய்திறந்து அவளும் புலம்பிடவே |
| |
| பட்டினத் தோரெல்லாம் பார்த்துப் புலம்பிடவே |
| திட்டினவே காத்தவனார் திருசிர புரங்கடந்து |
| |
| காவேரி தான்கடந்து கஸ்தூரி ரங்கரையும் |
| நாவாலே துதித்து நல்லஜெம்பு நாதரையும் |
| |
| தாயார் அகிலாண்டவளை தான்பணிந்து காத்தவனார் |
| காயாம் பூ வண்ணனான கன்னனே வாருமென்று |
| |
| கொள்ளடத்தைத் தான்கடந்து கூட்டி வடக்காக |
| மெள்ளவே பாச்சூர் மேடைவந்து சேர்ந்தார்கள் |
| |
| பாச்சூர் மேடைதனில் சென்று காத்தான் |
| பவ்வியமாய் மற்றந்த தளவாய் தன்னை |
| ஆச்சாவும் தேக்கதுவும் இரண்டும் சேர்த்து |
| அறுபதடி குறையாமல் அளவாய் இங்கே |
| பாச்சாவின் மாசியுட மலையிற் சென்று |
| பாங்குடனே கொண்டுவந்து பதிப்பா யாகில் |
| தாழ்ச்சியது குறைவில்லா சம்பத் தாக |
| தருகுவேன் என்னாளும் தருகு வேனே |