|
காத்தவனார் சொல்ல கனத்த தளவாயும் |
இதமுடன் காத்தவனே இன்பமாய் கொண்டாடி |
|
கொல்லி மலையேறி கூசாமல் காளிவனம் |
நல்ல சதுரகிரி நடுவில்நின்ற தேக்குமரம் |
|
ஆச்சாவும் தேக்கதுவும் அறுபதடி வெட்டிவந்து |
வாச்சியால் சீவி வர்ணமது இழைத்து |
|
ஐயர் உரைத்தபடி அச்சுவண்டி மேலேற்றி |
கொண்டுவந்து சேர்த்தார்கள் கொடிய கழுமரத்தை |
|
அன்றுதான் காத்தவனார் அம்மரத்தைக் கண்டருளி |
சந்தோஷம் தானாகி தளவாய் தனைப்பார்த்து |
|
தந்தாரே வெண்ணீறு சம்பத்து உண்டாக |
மாறாத செல்வம் வளரவே தந்தருளி |
|
தாராளும் காத்தவனார் தச்சன் தனையழைத்து |
திருவானைக் காவல்வளர் ஜெம்புலிங்க ஆசாரி |
|
மருவிலா சீரங்கம் வாழும்ரெங்கர் ஆசாரி |
ஆசாரி யார்களேநீர் அன்பாய்க் கழுமரமும் |
|
தற்சகுனம் செய்துவைத்தால் சம்பத்து உண்டாக |
புத்திர செல்வமுடன் பெருஞ்செல்வம் காமாக்ஷி |
|
சித்தமுடன் கொடுப்பாள் செய்யுங்கள் வேலையென |
தெண்டனிட்டு ஆசாரி செய்தார் கழுமரமும் |
|
செய்தனன்காண் ஆசாரி சிறந்து தோன்ற |
ஜெகத்திலுள்ள சித்திர மெல்லாம் |
மெய்தான்காண் காத்தவனும் கழுவி லேற |
மேவியதோர் கைப்பல கையுடன் |
பேய்தானம் விட்டகல மெய்நிலைக்க இரண்டுபேர் |
பூதலத்தில் உள்ளவர்கள் புகழ்ந்திடச் |
செய்ததொரு வேலைதனைக் கண்டு காத்தான் |
திருவாக நல்வாக்குச் செப்புவானே |
|
தெய்வ மாவதும் உங்களால் |
உபதேச மாவதும் உங்களால் |
வைய மாவதும் உங்களால் |
மன்ன னாவதும் உங்களால் |