பக்கம் எண் :

50காத்தவராயன் கதைப்பாடல்

காத்தவனார் சொல்ல கனத்த தளவாயும்
இதமுடன் காத்தவனே இன்பமாய் கொண்டாடி
 
கொல்லி மலையேறி கூசாமல் காளிவனம்
நல்ல சதுரகிரி நடுவில்நின்ற தேக்குமரம்
 
ஆச்சாவும் தேக்கதுவும் அறுபதடி வெட்டிவந்து
வாச்சியால் சீவி வர்ணமது இழைத்து
 
ஐயர் உரைத்தபடி அச்சுவண்டி மேலேற்றி
கொண்டுவந்து சேர்த்தார்கள் கொடிய கழுமரத்தை
 
அன்றுதான் காத்தவனார் அம்மரத்தைக் கண்டருளி
சந்தோஷம் தானாகி தளவாய் தனைப்பார்த்து
 
தந்தாரே வெண்ணீறு சம்பத்து உண்டாக
மாறாத செல்வம் வளரவே தந்தருளி
 
தாராளும் காத்தவனார் தச்சன் தனையழைத்து
திருவானைக் காவல்வளர் ஜெம்புலிங்க ஆசாரி
 
மருவிலா சீரங்கம் வாழும்ரெங்கர் ஆசாரி
ஆசாரி யார்களேநீர் அன்பாய்க் கழுமரமும்
 
தற்சகுனம் செய்துவைத்தால் சம்பத்து உண்டாக
புத்திர செல்வமுடன் பெருஞ்செல்வம் காமாக்ஷி
 
சித்தமுடன் கொடுப்பாள் செய்யுங்கள் வேலையென
தெண்டனிட்டு ஆசாரி செய்தார் கழுமரமும்
 
செய்தனன்காண் ஆசாரி சிறந்து தோன்ற
   ஜெகத்திலுள்ள சித்திர மெல்லாம்
மெய்தான்காண் காத்தவனும் கழுவி லேற
   மேவியதோர் கைப்பல கையுடன்
பேய்தானம் விட்டகல மெய்நிலைக்க இரண்டுபேர்
   பூதலத்தில் உள்ளவர்கள் புகழ்ந்திடச்
செய்ததொரு வேலைதனைக் கண்டு காத்தான்
   திருவாக நல்வாக்குச் செப்புவானே
 
தெய்வ மாவதும் உங்களால்
   உபதேச மாவதும் உங்களால்
வைய மாவதும் உங்களால்
   மன்ன னாவதும் உங்களால்