|
உய்யநா னொளியாக சாலைக்கு |
உயர்ச்சி யானகண் ணாளரே |
தையல் காமாக்ஷி தானும் |
தண்ணருள் செய்கு வாளே |
|
வாழிபெற்றக் கொல்லர் மறுபடியும் காத்தவர்க்கு |
ஆழிதனில் இருக்கும் ஆயனுடை பாம்பணைபோல் |
|
விஸ்தாரம் ஆக விளங்குமுயிர்த் தூண்டிபண்ணி |
கஸ்தூரிப் பொட்டணங்கள் கழுதனிலே தானிட்டார் |
|
தூண்டி துடைப்பருமன் தூண்டிமுள் கைப்பருமன் |
தாண்டுமுயிர்த் தூண்டியிலே தங்கமுத்துப் போயேறி |
|
வேண்டியதோர் பூவும் விதமான சிங்காரம் |
பூண்டிடவே சங்கிலியும் போத சமைந்தருளும் |
|
பாச்சூர் மேடை பதிவாய்க் கழுமரமும் |
காசுமதும் இல்லாமல் தானே படைத்தருளி |
|
நட்டு கழுமரமும் நாலுபுறம் பந்தலிட்டு |
ஒட்டுப் பலகையுடன் உயிர்த் திருகாணியுடன் |
|
சாற்றியே பக்கமதில் தான்சமைந்தான் ஆசாரி |
போற்றியே காத்தவனை புகழ்ந்து தளவாயும் |
|
சமைந்த கழுவதனில் தானேற வாருமென்று |
அமைந்த தொரு ஆசிரியம் அன்பாகப் பாடுகிறான் |
|
கந்தமணி திண்புயனே கண்டியுரு மாலையுடன் |
கழுவேறி மீள வருவீர் |
கஸ்தூரி வாசகா ஆரங் குலுங்கிட |
கழுவேறி மீள வருவீர் |
|
சுந்தரா யுதத்தனே காத்தவ ராயனே |
சுகந்துகழு ஏற வாரீர் |
துய்யனே பூலோகம் வையகம் தழைத்திட |
துணிந்துகழு ஏற வாரீர் |