|
| பந்தமாய் உனதுதிருப் பாதமது காணவே |
| படுங்கழுவில் ஏற வாரீர் |
| பல்லாண்டு கூறினேன் என்மனைகாத்த தேசிகா |
| மரக்கழுவில் ஏற வாரீர் |
| |
| எந்தனுட வினையகல எந்நாளும் அருகிருந்து |
| இக்கழுவில் ஏற வாரீர் |
| எங்கள் காமக்ஷி அருள்பெறவே கழுவிற்கு |
| இப்போதே வருகு வாயே. |
| நடை |
| வருவாயென்று சொல்லி மலரடியைத் தெண்டனிட்டு |
| பிரியமுடன் தளவாய் பல்லாண்டு கூறிடவே |
| |
| முன்னே அனுப்பிவிட்டு முத்துமுடி காத்தவனார் |
| பின்னாக முதலைப் பாருதனைத் தானேகி |
| |
| மாலையற்கு சேதிவகை மேலாய் உரைகின்றார் |
| |
| |
| அந்தமுடன் கழுவேறத் தளவாய் வந்து |
| அழைத்திடவே காத்தவனார் மாலை பக்கம் |
| பந்தமுடன் நடந்ததெல்லாம் விபர மாக |
| பைங்கிளிக்குத் தானுரைக்க பாச்சூர் விட்டு |
| வங்கணமாய் கழுவேறி உன்னை யழைக்க |
| வருமளவும் இங்கிருமென மகிழ்ந்து கூறி |
| விந்தையுடன் பாரைவிட்டு பாச்சூர் நாடி |
| விரைந்தோடி ஐயனவர் வெளியில் வந்தாரே |
| |
| |
| முதலையாம் பாரை விட்டு |
| மோகன தேசி யேறி |
| அதலவிதள சுதள நிதள |
| பாதாள லோகமும் நடுங்கியே |
| |
| கதறிட அரசர் போற்றும் |
| கதிரொளி வர்ண னேபோல் |
| மதனவேள் சுந்தரக் காத்தான் |
| வந்தனன் கழுவ டிக்கே. |