|
பந்தமாய் உனதுதிருப் பாதமது காணவே |
படுங்கழுவில் ஏற வாரீர் |
பல்லாண்டு கூறினேன் என்மனைகாத்த தேசிகா |
மரக்கழுவில் ஏற வாரீர் |
|
எந்தனுட வினையகல எந்நாளும் அருகிருந்து |
இக்கழுவில் ஏற வாரீர் |
எங்கள் காமக்ஷி அருள்பெறவே கழுவிற்கு |
இப்போதே வருகு வாயே. |
நடை |
வருவாயென்று சொல்லி மலரடியைத் தெண்டனிட்டு |
பிரியமுடன் தளவாய் பல்லாண்டு கூறிடவே |
|
முன்னே அனுப்பிவிட்டு முத்துமுடி காத்தவனார் |
பின்னாக முதலைப் பாருதனைத் தானேகி |
|
மாலையற்கு சேதிவகை மேலாய் உரைகின்றார் |
|
|
அந்தமுடன் கழுவேறத் தளவாய் வந்து |
அழைத்திடவே காத்தவனார் மாலை பக்கம் |
பந்தமுடன் நடந்ததெல்லாம் விபர மாக |
பைங்கிளிக்குத் தானுரைக்க பாச்சூர் விட்டு |
வங்கணமாய் கழுவேறி உன்னை யழைக்க |
வருமளவும் இங்கிருமென மகிழ்ந்து கூறி |
விந்தையுடன் பாரைவிட்டு பாச்சூர் நாடி |
விரைந்தோடி ஐயனவர் வெளியில் வந்தாரே |
|
|
முதலையாம் பாரை விட்டு |
மோகன தேசி யேறி |
அதலவிதள சுதள நிதள |
பாதாள லோகமும் நடுங்கியே |
|
கதறிட அரசர் போற்றும் |
கதிரொளி வர்ண னேபோல் |
மதனவேள் சுந்தரக் காத்தான் |
வந்தனன் கழுவ டிக்கே. |