|
நடை |
கழுவடியில் வந்துநின்று காத்த பரிமளமும் |
தொழுது வணங்கி துய்யோனும் ஏணிவழி |
|
அன்னாள் உரைத்தபடி அபத்தமே வாராமல் |
இன்னாளில் எந்தனுக்கு ஈஸ்வரியே மாகாளி |
|
அம்பலம் தன்னிலே நடன மாடிய |
அன்னையே பத்திர காளியே |
|
அருள்வனம் தன்னில் பறவை கொன்றிட |
அன்புடன் உன்னை தேடியே |
|
கம்பனையும் வென்ற தேவரீர் காளி |
காளியே வன கூளியே |
|
கண்டுமே போற்றிட வாளுட கையும் |
கையிலேந் திட்ட காளியே |
|
தும்பை சூடிப் பிறையணிந்திடும் |
கூளியே மா காளியே |
|
சொல்லுநாள் அடியேனும் மாலையை |
சிறையெடுத்து நான் கூட்டியே |
|
வம்பனாய்க் கழுவி லேறும் வேளையில் |
வந்துநீ யருள்தந் தருள |
|
மலரடி தொழுத டியேன் உனக்கு |
எதிர்வந் திடயிது சமயமே. |
|
நடை |
காளி கொடுத்தருளும் கையருவாள் கிண்ணரியும் |
நீலியவள் மாலைதனை நேசமுடன் தானழைத்து |
|
வாழி உமையவளே மனதில் நினைத்தருளி |
தாயே காமாக்ஷி தானுரைத்த வாக்குப்படி |
|
மகா ஈஸ்பரருடனே வந்தருள வேணுமென்று |
|
கந்தன் கணபதியை கருத்திலே தான்துதித்து |
பந்தமுடன் தான்நினைந்து பாடுகிறார் தேவாரம். |