பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்53

நடை
கழுவடியில் வந்துநின்று காத்த பரிமளமும்
தொழுது வணங்கி துய்யோனும் ஏணிவழி
 
அன்னாள் உரைத்தபடி அபத்தமே வாராமல்
இன்னாளில் எந்தனுக்கு ஈஸ்வரியே மாகாளி
 
அம்பலம் தன்னிலே நடன மாடிய
   அன்னையே பத்திர காளியே
 
அருள்வனம் தன்னில் பறவை கொன்றிட
   அன்புடன் உன்னை தேடியே
 
கம்பனையும் வென்ற தேவரீர் காளி
   காளியே வன கூளியே
 
கண்டுமே போற்றிட வாளுட கையும்
   கையிலேந் திட்ட காளியே
 
தும்பை சூடிப் பிறையணிந்திடும்
   கூளியே மா காளியே
 
சொல்லுநாள் அடியேனும் மாலையை
   சிறையெடுத்து நான் கூட்டியே
 
வம்பனாய்க் கழுவி லேறும் வேளையில்
   வந்துநீ யருள்தந் தருள
 
மலரடி தொழுத டியேன் உனக்கு
   எதிர்வந் திடயிது சமயமே.
 
நடை
காளி கொடுத்தருளும் கையருவாள் கிண்ணரியும்
நீலியவள் மாலைதனை நேசமுடன் தானழைத்து
 
வாழி உமையவளே மனதில் நினைத்தருளி
தாயே காமாக்ஷி தானுரைத்த வாக்குப்படி
 
மகா ஈஸ்பரருடனே வந்தருள வேணுமென்று
 
கந்தன் கணபதியை கருத்திலே தான்துதித்து
பந்தமுடன் தான்நினைந்து பாடுகிறார் தேவாரம்.