| பச்சை மால்தங் கையே | பரமனார் இடபா கமதில் | இச்சையாய் கூடி வாழும் | ஈஸ்பரி யம்மாள் கேளும் | நிச்சய மாலை தன்னால் | நெடுங்கழு வேறச் சொன்ன | கச்சி காமாக்ஷி தேவி | கடுக வந்தருள் செய்வாயே. | | உச்சித மாக நீயும் | உகந்து தான்சா பமிட்டாய் | நச்சர வணியே பூண்ட | நாதனார் பாணியே கேளாய் | அச்சமே ஏது மின்றி | அடியேனும் கழு விலேற | கச்சி காமாக்ஷி தேவி | கடுக வந்தரு ளுவாயே | | என்னையே உண்டு பண்ணி | இனிது டன்சா பமிட்டு | பொன்னகர் தன்னி லென்னை | போதவே பிறவு மென்று | அன்னையே கைலை வாழும் | அரனிட பாக மாதே | கன்னிகா மாட்சிதேவி | கடுக வந்தருள் செய்வாயே. | | இக்ஷண மாக யானும், | இப்புவி தனிலு தித்து | அச்ச மதேயில் லாமல் | ஆரிய மாலை தன்னை | நற்சிறை எடுத்து என்னை | தூண்டியில் ஏறச் சொன்ன | கட்சி காமாக்ஷி தேவி | கடுக வந்தரு ளுவாயே |
|
|