| | பச்சை மால்தங் கையே | | பரமனார் இடபா கமதில் | | இச்சையாய் கூடி வாழும் | | ஈஸ்பரி யம்மாள் கேளும் | | நிச்சய மாலை தன்னால் | | நெடுங்கழு வேறச் சொன்ன | | கச்சி காமாக்ஷி தேவி | | கடுக வந்தருள் செய்வாயே. | | | | உச்சித மாக நீயும் | | உகந்து தான்சா பமிட்டாய் | | நச்சர வணியே பூண்ட | | நாதனார் பாணியே கேளாய் | | அச்சமே ஏது மின்றி | | அடியேனும் கழு விலேற | | கச்சி காமாக்ஷி தேவி | | கடுக வந்தரு ளுவாயே | | | | என்னையே உண்டு பண்ணி | | இனிது டன்சா பமிட்டு | | பொன்னகர் தன்னி லென்னை | | போதவே பிறவு மென்று | | அன்னையே கைலை வாழும் | | அரனிட பாக மாதே | | கன்னிகா மாட்சிதேவி | | கடுக வந்தருள் செய்வாயே. | | | | இக்ஷண மாக யானும், | | இப்புவி தனிலு தித்து | | அச்ச மதேயில் லாமல் | | ஆரிய மாலை தன்னை | | நற்சிறை எடுத்து என்னை | | தூண்டியில் ஏறச் சொன்ன | | கட்சி காமாக்ஷி தேவி | | கடுக வந்தரு ளுவாயே |
|
|