பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்55

வன்னியெனு திருகண்டருடன் சார்ந்து கம்பதி
   வாழும் தாயே
எண்ணமிலா பச்சமலை வயிறசெட்டி பாளையமும்
   இலங்கும் கூத்தூர்
சொர்ணமணி வீரேஸ்புரம் ஓமாந்தூர் பதிமுழுதாய்
   துலங்கி யானும்
எண்ணியான் கழுவேற காமாக்ஷி எத்தனுக்கு
   எதிர்நிற்பாளே.
 
தொழுகுலமும் அரசர்களும்
   தேசமதில் வணிகர்களும்
   தொழுது வாழ்க
 
வளர்குலமே கங்கைகுலான்
   வளஞ்சார்ந்த இந்திரகுலான்
   வண்மை யாக
 
கெளிர் பூசை தொழவருளும்
   சம்பந்தி காமாக்ஷி
   சிறக்க என்றும்
 
கழுவளரும் பாவனை போல்
   குடிவளர்க்கக் காமாக்ஷி
   கருது வாயே
 
முக்கோடி தேவதையும்
   யான்தொழுதேன் சத்தியமாய்
   முன்னே நின்று
 
எக்கோடி மனிதருக்கும்
   வரமருளும் ஈஸ்வரியே
   எந்தன் தாயே
 
பொற்கொடி நிகராக
   யான்நம்பி மாலையரை
   சிறையில் வைத்தேன்
 
தற்காக்க இதுசமயம்
   காமாக்ஷி முத்தியருள்
   தருகு வாயே