|
| முப்பத்து முக்கோடி தேவர் முதலாக |
| நாற்பத்து எண்ணாயிரம் முனிவர்கள் தன்னுடனே |
| |
| அன்ன காமாக்ஷியரை அடிவணங்கித் தெண்டனிட்டு |
| தென்கைலை வாழும் சிவனாரைத் தெண்டனிட்டு |
| |
| அம்மான் திருமாலை அடிவணங்கி தெண்டனிட்டு |
| தாக்கமுள லெக்ஷ்மியை தானே அடிபணிந்து |
| |
| தொழுது வணங்கியையன் துய்யோனும் ஏணிவழி |
| பழுதாலே தானேறி பார்க்கக் கழுமுனையில் |
| |
| அன்றுதான் சேப்பிளையான் அண்ணாந்து பார்த்துநின்று |
| கண்டுதான் மைந்தனையும் கண்ணீர் சொரிந்தருளி |
| |
| என்றுனைக் காண்பேன் என்கண்மணியே என்றழுதான் |
| |
| பிள்ளையில்லாப் பாவியு நானுனை யெடுத்துப் |
| பிரியமாக வளர்த்தே னப்பா |
| |
| கள்ளவிழி மாலையி னால்கழு வேறிப் |
| பதம்பெறவும் காண்போ ராகி |
| |
| தெள்ளமிர்தமே கொடுத்தாள் அவளும் நானும் |
| தெரியநின்று தயங்கு கின்றோம் |
| |
| உள்ளதொரு நல்வாக்கு நீயுரைத் திடுவாய் |
| எந்தனுக்கு உயிருங் கொளவே. |
| |
| தகப்பன் சேப்பிளையான் தாயாரும் சங்கப்பிள்ளை |
| தேசத்துக் கதிபதியாம் தீரனவன் ஆரியப்பபன் |
| |
| இகத்தில் வளர்த்தருளும் என்தகப்பா கேட்டருளாய் |
| ஈஸ்பரன் கிருபையினால் எடுத்து வளர்த்தாய்நீ |
| |
| சால நல்வாக்கு சாற்றுகிறேன் கேளுமினி |
| |
| நீர்க்குமிழி ஏது நிலைத்த காயமேது |
| பார்மேல் பிறந்தவர்கள் பரலோகம் சேர்வதல்லால் |
| |
| என்னாளும் பூலோகம் இருப்பார் ஒருவரில்லை |
| நன்றாக உந்தனுக்கு நானுமிகச் சொல்லுகிறேன் |
| |
| காமாக்ஷி வாசலுக்கு காத்தானென்று பேரும்பெற்று |
| காமாக்ஷி வாசலுக்கு நல்பதியே உண்டுபண்ணி |