|
முப்பத்து முக்கோடி தேவர் முதலாக |
நாற்பத்து எண்ணாயிரம் முனிவர்கள் தன்னுடனே |
|
அன்ன காமாக்ஷியரை அடிவணங்கித் தெண்டனிட்டு |
தென்கைலை வாழும் சிவனாரைத் தெண்டனிட்டு |
|
அம்மான் திருமாலை அடிவணங்கி தெண்டனிட்டு |
தாக்கமுள லெக்ஷ்மியை தானே அடிபணிந்து |
|
தொழுது வணங்கியையன் துய்யோனும் ஏணிவழி |
பழுதாலே தானேறி பார்க்கக் கழுமுனையில் |
|
அன்றுதான் சேப்பிளையான் அண்ணாந்து பார்த்துநின்று |
கண்டுதான் மைந்தனையும் கண்ணீர் சொரிந்தருளி |
|
என்றுனைக் காண்பேன் என்கண்மணியே என்றழுதான் |
|
பிள்ளையில்லாப் பாவியு நானுனை யெடுத்துப் |
பிரியமாக வளர்த்தே னப்பா |
|
கள்ளவிழி மாலையி னால்கழு வேறிப் |
பதம்பெறவும் காண்போ ராகி |
|
தெள்ளமிர்தமே கொடுத்தாள் அவளும் நானும் |
தெரியநின்று தயங்கு கின்றோம் |
|
உள்ளதொரு நல்வாக்கு நீயுரைத் திடுவாய் |
எந்தனுக்கு உயிருங் கொளவே. |
|
தகப்பன் சேப்பிளையான் தாயாரும் சங்கப்பிள்ளை |
தேசத்துக் கதிபதியாம் தீரனவன் ஆரியப்பபன் |
|
இகத்தில் வளர்த்தருளும் என்தகப்பா கேட்டருளாய் |
ஈஸ்பரன் கிருபையினால் எடுத்து வளர்த்தாய்நீ |
|
சால நல்வாக்கு சாற்றுகிறேன் கேளுமினி |
|
நீர்க்குமிழி ஏது நிலைத்த காயமேது |
பார்மேல் பிறந்தவர்கள் பரலோகம் சேர்வதல்லால் |
|
என்னாளும் பூலோகம் இருப்பார் ஒருவரில்லை |
நன்றாக உந்தனுக்கு நானுமிகச் சொல்லுகிறேன் |
|
காமாக்ஷி வாசலுக்கு காத்தானென்று பேரும்பெற்று |
காமாக்ஷி வாசலுக்கு நல்பதியே உண்டுபண்ணி |