அப்படியானால் சுமார் 300 ஆண்டுகளுக்கு
முன்னர் சக்கிலியர் தமிழ்
நாட்டில் நாயக்கர் ஆட்சி பலமாக வேரூன்றாத இடங்களுக்குக் குடி
பெயர்ந்திருக்கவேண்டும். ஆரிய நாடு நாயக்கர் ஆட்சியின் கீழ் இல்லை.
ஆகவே பகடைகள் அல்லது சக்கிலியர்கள் அங்குக் குடியேறி வாழ்ந்தார்கள்
என்று எண்ணினால் தவறெதுவும் இல்லை. எனவே முடிவாக 260
வருஷங்களுக்கும், 300 வருஷங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில்
இச்சம்பவங்கள் நடந்திருக்கலாம். (கி.பி. 1658-1738)
ஆனால்
260 வருஷங்களுக்கு முன் பாடப்பட்ட குறவஞ்சியில், குறத்தி
குறி சொல்லும்போது தெய்வங்களை அழைக்கும் கட்டத்தில்,
“செப்பருமலைமேல் தெய்வ கன்னியர்தான்.
ஆரியங்காவா, அருட் சொரிமுத்தே !” |
என்ற
அடிகள் உள்ளன. இதனோடு முத்துப்பட்டன்கதையில் வரும்
காப்புச் செய்யுளை ஒப்புநோக்குவோம்.
“துட்டரை யடக்குகின்ற சொரிமுத்து
ஐயன்வாசல்
பட்டன்மேல் வரவு பாட பால முக்கணன் காப்பாமே.” |
சொரிமுத்து
என்பது பாபநாசத்தில் சொரிமுத்தையன் கோவில்
குடிகொள்ளும் தெய்வம். குற்றாலக் குறவஞ்சி ஆரிய நாட்டையும்,
சொரிமுத்து என்ற பெயரையும் குறிக்கிறது. காப்புச் செய்யுளும்
சொரி முத்தையன் வாசல் பட்டன் என்று கூறுகிறது. வாசல் என்பது வாசலில்
காவலுக்கு நிறுத்திய தெய்வம். அது இன்றும் கோவிலுக்கு வடக்கேயுள்ள
பட்டவராயன் கோவிலில் இருக்கிறது. அங்கே ஒரு ஆண் உருவச் சிலையின் பக்கத்தில்
இரண்டு பெண் சிலைகளும் உள்ளன. பட்டவராயன் சிலை
முத்துப்பட்டனையும், பெண்ணுருவச் சிலைகள் மனைவியர்
பொம்மக்காவையும், திம்மக்காவையும் குறிப்பனவாகும்.
கோயிலுக்குள் சிவலிங்க மொன்று இருக்கிறது. அதன்
பெயர்
மகாலிங்கம். அதனிரு புறத்திலும் பூதத்தார் சிலையும், சொரி முத்தையன்
சிலையும், உள்ளன. இச் சொரி முத்தையனே, குறவஞ்சியிலும், பல வில்லுப்
பாட்டுக்களிலும், குறிப்பிடப்படுகிறார். அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள
அடைமொழி ‘வல்லவர் சொரி முத்தையன்’ என்பன. இவற்றைக் காணும்போது
பட்டவராயன் கதை பரவிய போதே சொரி முத்தையன் கோவில் புகழ்
பெற்றிருந்தது என்று கருதலாம்.
|