144 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
எண்சீர் விருத்தம் கலைப்பெயரால் கதைகட்டிப் பாழ்ப டுத்தும் கருத்தொதுக்கிப் புதுநெறியிற் சென்ற போதும் இலக்கணத்தைப் புறக்கணியான் தமிழி யக்கம் எனச்சொல்லி மொழிவளர வழிகள் தந்தான் மலைப்பெய்தா எளியநடைக் கவிகள் தந்தான் மனம்கவரக் `குயில்’ இதழால் இசைத்த பாடல் கலைக்கடலாம் அவன்தந்த நாட்டு வாழ்த்து கருத்துக்கு நல்விருந்தாம் இசைப்பெ ருக்காம் இனத்திற்குள் பகைகொண்டு சாதிச் சேற்றில் இணைந்திருந்த நானதனை மறக்க, ஊக்கம் எனக்கூட்டிக் கரைசேரச் செய்து தந்த இயற்கவிஞன் பாடலொன்றே! மணந்த பின்னர் மனக்கவலை ஒழித்துவளர் இன்பம் பொங்க வாழ்வதற்குக் குடும்பவிளக் களித்தான் அன்னான்; வனப்புடைய கவியுலகைக் காண எற்கு வழிகாட்டித் திருப்புமுனை ஆகி நின்றான் 5 |