104 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
எத்துயர் ஆகினும் விட்டுயிர் போகினும் ஏற்றிடும் கொள்கையர் வாழ்வினை வாட்டும் மெத்தையில் சாய்ந்தவர் மேனிமி னுக்கியர் மேடையில் வாழ்பவர்க் கின்பங்கள் ஊட்டும் -விளம்பர மல்லிகை யாகிய நன்மலர் தாமவை மாபெரும் விளம்பரம் இல்லெனில் வீழும் புல்லிய கள்ளியிற் பூத்தவை யாகினும் பூமியில் விளம்பரம் உண்டெனில் வாழும் -விளம்பர மருள்படு சிந்தையர் மயங்கிய நெஞ்சினர் மதியைம றந்தவர் இங்குளர் என்றால் இருள்பக லாகிடும் பகலிர வாகிடும் எதனையும் நம்புவர் விளம்பரம் ஒன்றால் -விளம்பர |