146 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
அன்பினைக் கொல்களம் தன்னலம்-அதன் அடைகுழி ஆசைகொள் புன்மனம் தன்மையை மாய்ப்பது கள்ளினம்-அதைத் தாங்கிடும் புதைகுழி பெண்ணலம். பண்பினைக் கொல்களம் சூதுகள்-அதன் படுகுழி யாகிடும் வாதுகள் மன்பதை சாய்வது மோதலில்-அதன் மறைகுழி நால்வகை வேதமே. |