| பாடுங்குயில் (பாடல்கள்) | 239 |
79 இசையால் வந்த மயக்கம் இசையால் வந்த மயக்கமடி -உன் இன்பமும் என்னுளம் மறக்குமடி
- இசையால் பசியோ இல்லை பாயோ தொல்லை பாலும் பழமும் பார்ப்பதும் இல்லை
- இசையால் பொருளும் உணர்வும் பொருந்திய பாடல் பொழுதெலாம் கேட்டால் போகுமே வாடல் இரவும் பகலும் என்மனம் நாடும் எத்தனை எத்தனை இன்பங்கள் கூடும்
- இசையால் குழலோ யாழோ கொடுத்திடும் ஒலியால் கோதைநின் வாயிதழ் படைத்திடும் குரலால் அழகோ வியமே அல்லல்கள் பறக்கும் ஆயிரம் பாடல்கள் என்னிடம் பிறக்கும்
- இசையால் |