28 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
வாரி முகந் தெடுத்தே - இன்ப வாரி திளைப் பதற்கே நேரிய செல் வங்கள்தாம் - தொகையில் நேடித் திரட்டி வைத்தாய் ஐவகைக் காப் பியமாம் - செல்வம் ஆக்கி எனக் களித்தாய் கைதவக் கள் வரினால் - இரண்டு காப்பியம் கா ணுகில்லேன் பாட்டிசைச் செல் வங்களும் - இழந்தேன் பட்டயம் மட் டுமுண்டு நாட்டினில் முன் பிறந்தோர் - அயர்வால் நானவை காண் கிலனே இத்தனை போய் விடினும் - இன்னும் எட்டுத் தொகை யுடனே பத்தெனும் பாட் டுளதாம் - ஒவ்வொன்றும் பற்பல கோடி யன்றோ! பாட்டுப் புறப் பொருளால் - வீரப் பாங்கில் எனை வளர்த்தாய் ஈட்டும் அகப் பொருளால் - காதல் இல்லறம் கூட் டுவித்தாய் நின்பெயர் காத் திடுவேன் - தமிழே நீஎனைப் பெற் றதனால் உன்பெயர் ஓங் குதற்கே - பற்பல ஓவியம் நான் படைப்பேன். |