பக்கம் எண் :

காவியப் பாவை27

15
தமிழ் - என் தந்தை
-

முன்னைத் தமிழ் மொழியே! - உலகில்
    மூப்பறி யா முதலே!
என்னை மகன் எனவே - புவியில்
    ஏற்றமுடன் அளித்தாய்

கற்றுத் தெளி வதற்கே - ஆசான்
    கண்டு பயிற் றுவித்தாய்
முற்றும் உணர்ந் தவனாம் - அந்த
    முன்னவன் வள் ளுவனாம்

முத்தமிழ் வா ணர்கள்சூழ் - அவையில்
    முந்தி யிருந் திடவே
அத்தனே என்னை யுமோர் - சான்றோன்
    ஆக்கி மகிழ்ந் தனைநீ

தூது கலம் பகமாய்ப் - பெருகும்
    தோழர்கள் பற் பலராம்
தீது விளைப் பவராய் - அமையின்
    செப்பித் திருத் துவைநீ

குற்றமொன் றில் லதுவாம் - நல்ல
    கோல மனை யளித்தாய்
கற்றவன் கட் டியதே - அதுதொல்
    காப்பியம் என் பதுவே