பக்கம் எண் :

30கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

செல்வம் உற வரினும் - வறுமை
    சேர்ந்து துயர் தரினும்
பல்வகை இன் னலிலும் - என்மனப்
    பாவையே நான் பிரியேன்
நல்வழி காட் டிடடி - உன்றன்
    நட்பொன்று போ துமடி
சொல்வது சொல் லிவிட்டேன் - பிறகு
    தோழியுன் சித் தமடி

நாட்டவர்க் கஞ் சுதியோ? - உலகில்
    நம்மைத் தடுப் பவர்யார்?
காட்டுப் புலி யடிநான் - போரில்
    காத்திடு வேன் உனையே
வாட்டம் தவிர்ந் திடடி - கொடிய
    வாளுக்கும் அஞ் சுகிலேன்
கோட்டை மதி லகத்தோர் - முழக்கும்
    கொட்டுக்கும் அஞ் சுகிலேன்

காதல் உல கினிலே - அகப் பொருள்
    காவின் நடு வினிலே
மேதைகள் ஆக் கியதோர் - மாளிகை
    மீதினில் நா மிருப்போம்
மாதுநீ யா ழெடுத்தே - இசை
    மாரி பொழிந் திடுவாய்
காதற் களி யினில்நான் - பற்பல
    காவியம் பா டிடுவேன்.