30 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
செல்வம் உற வரினும் - வறுமை சேர்ந்து துயர் தரினும் பல்வகை இன் னலிலும் - என்மனப் பாவையே நான் பிரியேன் நல்வழி காட் டிடடி - உன்றன் நட்பொன்று போ துமடி சொல்வது சொல் லிவிட்டேன் - பிறகு தோழியுன் சித் தமடி நாட்டவர்க் கஞ் சுதியோ? - உலகில் நம்மைத் தடுப் பவர்யார்? காட்டுப் புலி யடிநான் - போரில் காத்திடு வேன் உனையே வாட்டம் தவிர்ந் திடடி - கொடிய வாளுக்கும் அஞ் சுகிலேன் கோட்டை மதி லகத்தோர் - முழக்கும் கொட்டுக்கும் அஞ் சுகிலேன் காதல் உல கினிலே - அகப் பொருள் காவின் நடு வினிலே மேதைகள் ஆக் கியதோர் - மாளிகை மீதினில் நா மிருப்போம் மாதுநீ யா ழெடுத்தே - இசை மாரி பொழிந் திடுவாய் காதற் களி யினில்நான் - பற்பல காவியம் பா டிடுவேன். |