பக்கம் எண் :

காவியப் பாவை5

1
காவியப் பாவை

-

எடுப்பு

எங்கள் தமிழ் மொழியே! - உயிரே!

-எங்கள்

தொடுப்பு

இங்குனை நாங்கள் இகழ்ந்தத னாலே
இழிநிலை அடைந்தோம் உரிமையும் இழந்தோம்

-எங்கள்

முடிப்பு

பூமியில் மானிடர் தோன்றிய நாளே
பூத்தனை தாமரைப் பூவினைப் போலே
பாமிகும் காவியப் பாவையே தாயே!
பணிந்தோம் கடைக்கண் பார்த்தருள் வாயே

-எங்கள்

இயலிசை கூத்தென இலங்கிடு வாயே
எமதுயிர் உணர்வுகள் யாவையும் நீயே
மயலெமை நீங்கிட மதியருள் வாயே
மைந்தரைக் காத்தருள் செந்தமிழ்த் தாயே

-எங்கள்