பக்கம் எண் :

காவியப் பாவை69

சினந்தேன்நீ உண்ணுகிற போது - சோற்றைச்
சிதறினாய் வீடெங்கும் என்றறிந்த போது
மனம்போன போக்கிலுனை வைதேன் - பிள்ளை
மனநிலையை அறியாதிக் குற்றங்கள் செய்தேன்

குற்றம் பொறுப்பாய் என் கண்ணே - எனநான்
கூறுவதை அறியாய்நீ புரியாய்என் கண்ணே
செற்றம் தவிர்ந்தேன்என் கண்ணே - நாளை
செல்வமே உன்னோடு விளையாடு வேனே