பக்கம் எண் :

காவியப் பாவை81

54
விடுதலை வேண்டும்
-

வேண்டும் விடு தலையே - எனக்கு
    வேண்டும் விடுதலையே
யாண்டும் பறந் திடுவேன் - வானில்
    யாவையும் கண்டிடுவேன்

வண்ணப் பசுங் கிளியைச் - சிறையில்
வாட்டி வதக்குவதோ
    சின்னஞ் சிறியவரும் - என்றன்
சிந்தையைத் தேக்குவதோ

என்னினம் வாழ்ந்திடவும் - செந்தமிழ்
    ஏற்றம் மிகுந்திடவும்
மன்னுயிர்த் தா யகமே - உலகில்
    மாட்சிமை பெற்றிடவும்

பாடுவ தென் தொழிலாம் - இதற்குப்
பற்பல ஊறுகளோ!
    நாடு மொழி இனமே - உயர
நாடுவ தோர்குறையோ?

வீணரின் கூச் சலினால் - உரிமை
    வேட்கை தணிந்திடுமோ?
கோணல் நரிக் குணத்தால் - பாயும்
    கோளரி அஞ்சிடுமோ?