பக்கம் எண் :

காவியப் பாவை83

55
என்ன உலகமடா?
-

தேமலர்ச் சோலைதனில் - ஒருநாள்
    சென்று புகுந்திருந்தேன்
மாமரக் கூட்டமங்கே - பூத்து
    மாமணம் வீசியதே

தென்றல் உலாவரலால் - இனிமை
    தேடி வரவுங்கண்டேன்
ஒன்றிய நல்லமைதி - நெஞ்சில்
    ஓங்கிட நின்றிருந்தேன்

எங்கிருந் தோஇனிய - குரலொன்
    றென்னைக் கவர்ந்ததுவே
அங்கிருந் தேகினன்நான் - குரல்வரும்
    அந்தத் திசைவழியே

கன்னங் கரியஉடல் - எழிலைக்
    காட்டும் சிவந்தகண்கள்
மின்னும் அழகினையே - கண்டு
    மெய்மறந் தங்குநின்றேன்

கன்னங் கருநிறந்தான் - எனினும்
    காதலிற் சிக்கிவிட்டேன்
இன்னும்நீ பாடிடுவாய் - என்னை
    இன்பத்தில் ஆழ்த்திடுவாய்