84 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
என்னலும் அவ்விசைதான் - மீண்டும் எங்கும் நிறைந்ததுவே கன்னலின் சாற்றினிமை - உவமை காட்டுந் தரமிலதே யாழில் எழுமிசையோ - குழலோ யாதெனக் கூறிடுவேன்? பாழுல கைமறந்தேன் - அந்தப் பைம்பொழில் இன்னிசையால் அவ்விசை கேட்டொருவன் - ‘அடடா! அக்குயில் வாழ்க’வென்றான் செவ்விய ஓர்கவண்கல் - மோதிடச் சென்று பறந்ததுவே ‘சென்று பறந்ததடா - அடவோ! செத்து மடிந்திருந்தால் மென்று புசிப்பதற்கே - அக்குயில் மெத்தச் சுவைக்குமடா!’ என்னச் சலித்துரைத்தான் - கவண்கல் எய்த சிறுகயவன் என்ன உலகமடா! - நன்மை எப்படி வாழுமடா! |