பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 127

சூடு தணியவில்லை சொல்லெல்லாம் தீயாக்கிப்
பாடும் கவிதைகளில் பாயவிட எண்ணந்தான்;

நாடு பொறுக்குமோ என்றெண்ணி நல்லஇளஞ்
சூடு படக்கொடுத்தேன்; ஈதும் சுடுமென்றால்

குற்றம் எனதன்று; முற்றுந் தலைவாழை
பெற்ற சுவையைத்தான் பின்வாழை ஈன்றுநிற்கும்;

நாநலம் கொண்டார்க்கு நல்ல சுவைநல்கும்
பாநலம் வல்ல பரம்பரையில் யானொருவன்

ஈனும் கனியை இருந்து சுவைக்கவிட்டு
நானும் இருப்பேன் நயந்து.

தலைவர்:திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளார்

தலைப்பு:வாழையடி வாழை - பாரதியார்

இடம்:சரபோசி மன்னர் கல்லூரி - தஞ்சாவூர்

    நாள்:21-2-1960