பக்கம் எண் :

180கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

மூடுபனி சூழ முனைகின்றார் இக்கொடியர்;
கேடுதருங் கொள்ளையரைக் கேட்பதற்கோர் ஆளில்லை;
ஏனில்லை? செங்கதிரோன் இங்கே எழுவதற்கு
நானுண் டெனச்சொல்லி நல்ல விடிவெள்ளி
தோன்றிவரக் காண்கின்றோம்; துய்ய கதிரோனும்
வான்றிகழ வந்துவிடின் வாட்டி வதைக்குமிந்த
மூடுபனி சேர்ந்துருகி ஓடுபனி யாகாதோ?
நாடுநலம் பெற்றிலங்கும் நாளிங்கு வாராதோ?
வந்துவிடும்; வந்துவிடின் வாழ்விற் படுகின்ற
வெந்துயரம் அத்தனையும் வீழ்ந்துநிலா வாகுமன்றே;30
மண்ணிற் குடும்பங்கள் மாண்புற்று முன்னேற
எண்ணுகதிர் வாழ்த்தி இனிக்காண்போம் விண்குடும்பம்;
நாட்டிற் குடும்பமெனில் நற்றலைவன் வேண்டுமன்றோ?
காட்டுமிவ் விண்குடும்பங் காக்குந் தலைவன்யார்?
வாழுங் கதிரவன்றான் வானிற் றலைமகனாம்;
ஏழு கிழமையென எண்ணும் பொழுதில்நாம்
முன்னையிடந் தந்து மொழிவது ஞாயிறெனும்
முன்னவனை யன்றோ? முதன்மை அவற்களித்த
காரணத்தால், விண்குடும்பங் காக்குந் தலைமையினால்
தாரணிந்த நல்ல தலைமகனாக் கொண்டிடுவோம்;40
காக்குந் தலைவன் கதிரோன் எனப்படுமேல்
ஆக்குந் தலைமகள்யார்? அந்தத் திருமடந்தை
தண்மைக்கும் மென்மைக்கும் தங்கும் இடமாவாள்
பெண்மைக்கோர் காட்டாகப் பேசும் இயல்புடையாள்,
நாணத்தாற் கார்முகிலாம் நற்றுகிலைப் போர்த்திவரும்
வானத்தாள், தேனொத்தாள், வட்ட ஒளிமுகத்தாள்;
இத்தனையுங் கொண்டாளை ஏத்தி நிலவணங்கென்
றித்தரையோர் போற்றி இசைத்து மகிழ்வார்கள்;